Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக அரசியல் மொத்தமா மாறுதே.. இந்திய அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு! மத்திய அரசு பதில் என்ன

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக இந்திய அரசு அதிகாரி ஒருவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா பதிலளித்துள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் என்பவரைக் கொலை செய்ய இந்திய அரசு அதிகாரி ஒருவர் திட்டமிட்டதாகக் கூறி அமெரிக்க அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

 Indias response on US big charge in Gurpatwant Singh Pannun murder plot

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இந்தியா முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.

இந்தியா விளக்கம்: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ""சர்வதேச அளவில் நடக்கும் க்ரைம், கடத்தல், துப்பாக்கி விற்பனை மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையேயான வர்த்தகம் ஆகியவற்றை கூர்ந்து கண்காணித்து வருகிறோம். இதன் காரணமாகவே உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் தரும் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் என்பவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா 52 வயதான இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங்கை கொல்லும் சதியை அமெரிக்கா முறியடித்ததாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியான நிலையில், இப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யார் இவர்: குர்பத்வந்த் சிங் அமெரிக்கா மற்றும் கனடா என இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர். மேலும், அவர் சீக்கிஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்தியாவில் பல தீவிரவாத செயல்களைத் திட்டமிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், அவரை இந்தியா தேடப்பட்டு வரும் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது.

 Indias response on US big charge in Gurpatwant Singh Pannun murder plot

இவர் தான் சமீபத்தில் சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியாவில் செல்ல வேண்டாம் என்றும் ஏர் இந்தியாவில் மோசமான சம்பவம் நடக்கும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாகத் தான் இந்தியர் ஒருவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா சொல்வது என்ன: இது தொடர்பாக அமெரிக்கச் சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசு அதிகாரி ஒருவர் மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்துள்ளார். அவர் இந்தியா அல்லது வேறு இடங்களில் இருந்து செயல்பட்டு இருக்கலாம். அவர் அமெரிக்க மண்ணில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், "அந்த இந்திய அரசு அதிகாரி தன்னை 'சீனியர் ஃபீல்ட் ஆபீசர்' என்றும், 'உளவுத்துறை' ஆகிய துறைகளில் பணியாற்றியவர் என்றும் தன்னைப் பற்றியே கூறியிருக்கிறார். அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களைப் படுகொலை செய்யும் முயற்சிகளை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மேலும் அமெரிக்கா அல்லது வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எவரையும் விசாரிக்கவும், தடுக்கவும் மற்றும் வழக்குத் தொடரவும் நாங்கள் ரெடியாக இருக்கிறோம்" என்றார்.

சிக்கியது எப்படி: அமெரிக்காவின் குற்றச்சாட்டின்படி, குப்தா என்ற இந்த நபர் குர்பத்வந்த் சிங்கை கொலை செய்யக் கொலையாளி ஒருவரை அணுகியுள்ளார். இதற்காக ஒரு லட்சம் டாலரைக் கொடுப்பதாகவும் சம்மதித்துள்ளார். இதற்காகக் கடந்த ஜூன் மாதம் 15,000 டாலர் முன்பணமும் கொடுத்துள்ளார்.

இருப்பினும், கொலை செய்ய அவர் கொண்ட அந்த நபர் அமெரிக்க பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர் என்பதும் அவர் பாதுகாப்புத் துறையில் ரகசியமாக பணியாற்றி வந்ததும் அதன் பின்னரே தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் மட்டும் நிரூபிக்கப்பட்டால் குப்தா நிகில் குப்தா 20 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+