டிரம்ப்பை வீழ்த்த பைடனுக்கு கணக்கில்லாமல் நிதி... வாரி வழங்கிய மர்ம வள்ளல்கள்
வாஷிங்டன் : சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டிரம்ப்பை தோற்கடிப்பதற்காக, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கு கணக்கில்லாமல் அடையாளம் தெரியாத நபர்கள் நிதி வழங்கி, வெற்றி பெற வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இதுவரை எந்த அதிபர் வேட்பாளரும் வசூலிக்காத அளவாக 145 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்று புதிய சாதனையையே நிகழ்த்தி இருந்தார் பைடன். இந்த முழு தொகையையும் பொது மக்கள் அளிக்கவில்லை. அடையாளம் தெரியாத குழுவை சேர்ந்த பலர் அதிக அளவிலான தொகையை வழங்கி, பைடனை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இப்படி அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மட்டும் 28.4 மில்லியன் டாலர் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன் 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மிட் ரோம்னி தான் அதிகபட்சமாக 113 மில்லியன் டாலர்களை தேர்தல் நிதியாக பெற்றிருந்தார்.
பைடனின் தேர்தல் சுற்றுப் பயண வாகன செலவிற்காக மட்டும் 26 மில்லியன் டாலர்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து உண்மையில் பெறப்பட்ட மொத்த நிதி எவ்வளவு என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. பைடனின் தேர்தல் நிதி பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்த போதிலும் அது பற்றி, பைடனின் செய்தி தொடர்பாளர் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர்.
இது பற்றி ஜனநாயக கட்சியினர் கூறுகையில், நாங்கள் கறுப்பு பணங்களை தடை செய்ய நினைக்கிறோம். இப்படி அடையாளம் தெரியாமல் வந்த பணமும் ஊழலுக்கு சமம். டிரம்ப்பை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு இல்லாமல் ஆதரவாளர்கள் இந்த நிதியை பெற்றுள்ளனர்.
பைடனின் ஒவ்வொரு பிரசாரத்திற்கும் தனிநபர்களிடம் இருந்து மட்டும் தலா 2800 டாலர் வரை பெறப்பட்டுள்ளது. வசதிபடைத்தவர்கள் தாரளமாக காசோலை மூலமாக ஏராளமான நிதி அளித்ததும் கூட பைடனின் தேர்தல் இவ்வளவு அதிகம் வசூலானதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications