ஸ்ப்ரே அடித்தால் போதும்.. தற்கொலை எண்ணம் ஓடிவிடும்.. அமெரிக்காவில் அறிமுகமான ஜான்சன்&ஜான்சன் மருந்து
வாஷிங்டன்: மனச் சோர்வு காரணமாக தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு ஸ்ப்ரவேட்டோ என்ற, ஸ்ப்ரே ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்.
கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் மக்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க மனச்சோர்வு நோயாளிகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மனச்சோர்வு ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணத்திற்கு கொண்டு சென்று விட்டு விடும் என்பதால் அதை தடுப்பதற்கான ஆய்வுகளில் மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ப்ரே போதும்
அதன் ஒரு பகுதியாக, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் அமெரிக்க நரம்பியல் அறிவியல் மருத்துவ விவகாரத்துறை பிரிவின் துணைத் தலைவர் மைக்கேல் கிராமர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்பிரே அடித்துக் கொண்டால் தற்கொலை எண்ணம் போய்விடும். இது போன்ற ஒரு ஸ்ப்ரே தங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிலவரம்
அமெரிக்காவில் சுமார் 12 சதவீதம் மக்கள் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஸ்பிரே அவசர தேவைகளுக்கு உபயோகிக்கப்படலாம். இதன் பிறகு மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வரலாம்.

6000 பேரிடம் பரிசோதனை
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேரிடம் இந்த ஸ்பிரே கொடுத்து பரிசோதிக்கப்பட்டு உள்ளது. அதில் நல்ல பலன் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. வழக்கமாக மனச்சோர்வை குறைப்பதற்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் சுமார் ஒரு வார காலத்துக்குப் பிறகு வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஸ்ப்ரே உடனடியாக வேலையை தொடங்குகிறது என்பதுதான் சிறப்பம்சம் ஆகும்.

பாசிட்டிவ் எண்ணம்
எண்ணங்கள், மனநிலை போன்றவற்றில் மிக விரைவாக மாற்றத்தை ஏற்படுத்தி, பாசிட்டிவ் எண்ணங்களுக்கு திருப்பி விடுவதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஸ்ப்ரே நல்ல வகையில் பலன் கொடுக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பே அமெரிக்காவில் தற்கொலை பிரச்சினை என்பது மிக அதிகமாக இருந்தது. மனச்சோர்வு பாதிப்பு உள்ளவர்கள் சுமார் 30% பேர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் அந்த நாட்டில்.

பரிந்துரை
அமெரிக்காவில், 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதில், மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்க கூடிய மருந்தாக இந்த ஸ்பிரே உள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலை விகிதத்தை வேகமாக குறைப்பதற்கு இந்த மருந்து உதவும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட, குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இதை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications