ஸ்ப்ரே அடித்தால் போதும்.. தற்கொலை எண்ணம் ஓடிவிடும்.. அமெரிக்காவில் அறிமுகமான ஜான்சன்&ஜான்சன் மருந்து
வாஷிங்டன்: மனச் சோர்வு காரணமாக தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு ஸ்ப்ரவேட்டோ என்ற, ஸ்ப்ரே ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்.
கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் மக்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க மனச்சோர்வு நோயாளிகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மனச்சோர்வு ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணத்திற்கு கொண்டு சென்று விட்டு விடும் என்பதால் அதை தடுப்பதற்கான ஆய்வுகளில் மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ப்ரே போதும்
அதன் ஒரு பகுதியாக, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் அமெரிக்க நரம்பியல் அறிவியல் மருத்துவ விவகாரத்துறை பிரிவின் துணைத் தலைவர் மைக்கேல் கிராமர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்பிரே அடித்துக் கொண்டால் தற்கொலை எண்ணம் போய்விடும். இது போன்ற ஒரு ஸ்ப்ரே தங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிலவரம்
அமெரிக்காவில் சுமார் 12 சதவீதம் மக்கள் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஸ்பிரே அவசர தேவைகளுக்கு உபயோகிக்கப்படலாம். இதன் பிறகு மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வரலாம்.

6000 பேரிடம் பரிசோதனை
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேரிடம் இந்த ஸ்பிரே கொடுத்து பரிசோதிக்கப்பட்டு உள்ளது. அதில் நல்ல பலன் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. வழக்கமாக மனச்சோர்வை குறைப்பதற்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் சுமார் ஒரு வார காலத்துக்குப் பிறகு வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஸ்ப்ரே உடனடியாக வேலையை தொடங்குகிறது என்பதுதான் சிறப்பம்சம் ஆகும்.

பாசிட்டிவ் எண்ணம்
எண்ணங்கள், மனநிலை போன்றவற்றில் மிக விரைவாக மாற்றத்தை ஏற்படுத்தி, பாசிட்டிவ் எண்ணங்களுக்கு திருப்பி விடுவதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஸ்ப்ரே நல்ல வகையில் பலன் கொடுக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பே அமெரிக்காவில் தற்கொலை பிரச்சினை என்பது மிக அதிகமாக இருந்தது. மனச்சோர்வு பாதிப்பு உள்ளவர்கள் சுமார் 30% பேர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் அந்த நாட்டில்.

பரிந்துரை
அமெரிக்காவில், 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதில், மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்க கூடிய மருந்தாக இந்த ஸ்பிரே உள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலை விகிதத்தை வேகமாக குறைப்பதற்கு இந்த மருந்து உதவும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட, குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இதை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர்












Click it and Unblock the Notifications