புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டேன்! கர்நாடகாவை மிஸ் செய்கிறேன்! சிவராஜ்குமார் உருக்கம்
வாஷிங்டன்: தான் புற்றுநோயிலிருந்து மீண்டதாக நடிகர் சிவராஜ்குமார் அமெரிக்காவிலிருந்து புத்தாண்டையொட்டி வீடியோ வாயிலாக உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வீடியோவில் சிவராஜ்குமார் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த நேரத்தில் நான் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேனோ என்பதால் பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறது. கர்நாடகாவை விட்டு அமெரிக்காவில் இருந்து எனக்கு உருக்கமான அனுபவமாக உள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் அச்சம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் எனது ரசிகர்கள் ஆதரவால் அது கணிசமாக குறைந்துள்ளது. அமெரிக்காவில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நன்றாக சிகிச்சை அளித்தனர். 45 ஆவது படத்தின் படப்பிடிப்புபோது எனக்கு கீமோதெரபி கொடுக்கப்பட்டது.
அப்போதே நான் கிளைமாக்ஸில் சண்டை காட்சிகளில் நடித்தேன். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்லும் நாள் நெருங்க நெருங்க எனக்கு பதற்றமாகவே இருந்தது. எனினும் எனது மனைவி கீதா, மகள் நிவேதா ஆகியோர் எனக்கு ஆதரவாக இருந்தனர். டாக்டர் மனோகர் என்பவர்தான் எனக்கு சிகிச்சை அளித்தார். அவர் என்னை குழந்தை போல் பாவித்து சிகிச்சை அளித்தார்.
எனது சிறுநீர் பை முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் யாரும் பயப்படத் தேவையில்லை. நான் நலமாக இருக்கிறேன். இரட்டை ஆற்றலுடன் திரும்பி வருவேன். எனக்கு அளவுக்கடந்த ஆதரவு தரும் எனது ரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மனைவி கீதா சிவராஜ்குமார் கூறுகையில், மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. அதாவது சிவராஜ்குமாருக்கு கேன்சர் குணமாகிவிட்டது என பரிசோதனை முடிவுகள் சொல்கின்றன. அவருக்கு உடல்நலம் மீண்டதற்கு காரணமே ரசிகர்களின் பிரார்த்தனைகள். இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றார்.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழில் கேப்டன் மில்லர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோல் செய்துள்ளார். இதனால் சிவராஜ்குமாரை கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் இதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள போவதாகவும் நவம்பர் மாதம் சொல்லப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் நானும் மனிதன்தான், எனக்கும் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். சில சிகிச்சை முறைகள் முடிந்துவிட்டன. இன்னும் சில சிகிச்சைகள் எடுக்கப்பட வேண்டி இருக்கிறது. அதன் பிறகு நான் இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அறுவை சிகிச்சை செய்து கொள்வேன் என கூறியிருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் திருப்பதி கோயிலுக்கு மனைவியுடன் சென்ற அவர் அங்கு மொட்டை அடித்து சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் அமெரிக்காவுக்கு டிசம்பர் மாத இறுதியில் சென்றார். அங்கு மியாமியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கேன்சர் கட்டி இருக்கும் சிறுநீர் பை (Urinary bladder) நீக்கப்பட்டது. சிவராஜ்குமாரின் குடலை பயன்படுத்தி செயற்கையான பை வைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications