"பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவில்" இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்
வாஷிங்டன்: பஞ்சாபில் "வாரிஸ் பஞ்சாப் டி" அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, இந்திய தூதரகத்திற்குள் நுழைந்து மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மீது வன்முறை வெறியாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மறைந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வாரிஸ் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை தொடங்கியிருந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் தீப் சித்து உயிரிழந்த பிறகு 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பதவியேற்றார்.

அம்ரித் பால் சிங்
அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கைகள் அதிகரிக்கத் தொடங்கின. அம்ரித் பால் சிங் உதவியாளரைப் பஞ்சாப் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவருக்காகப் பயங்கர ஆயுதங்களுடன் அம்ரித் பால் சிங் போலீஸ் நிலையத்தைத் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அப்போது நிலைமையை சமாளிக்க அம்ரித் பால் சிங் உதவியாளர் விடுவிக்கப்பட்டார்.

அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை
இருப்பினும், அப்போது முதலே அம்ரித் பால் சிங்கை போலீசார் தொடர்ந்து கண்காணிக்கத் தொடங்கினர். அதன்படி நேற்று முன்தினம் அவரை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர் இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய பாதுகாப்பு படை அனுப்பி வைக்கப்பட்டது.

78 பேர் கைது
இப்போது வரை வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்த 78 பேரை போலீசார் கைது செய்தனர். பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முடியவில்லை அவர் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அமிர்த் பால் சிங்கின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட நெருங்கிய உதவியாளர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்து
இதனால் பஞ்சாபில் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கைகளை கண்டித்து வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்து அங்கே இருந்த மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய தூதரக கட்டிடத்தில் 'ஃப்ரீ அம்ரித்பாலை' என்ற வாசகங்களையும் எழுதினர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தூதரக கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய பாராளுமன்றம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
-
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications