அந்த ஒரு ஏவுகணை சோதனை.. நடந்தது விபரீதம்.. கிம் ஜாங் உன் நிலை குறித்து வெளியான புது தகவல்
வாஷிங்டன்: ஏவுகணை ஏவுதல் சோதனையின்போது கிம் ஜாங் உன் காயமடைந்திருக்கலாம் என்று வட கொரியாவைச் சேர்ந்த முன்னாள் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.
Recommended Video
ஏப்ரல் 15 ம் தேதி வட கொரிய அதிபர் கிம், ஆளும் கட்சியின் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததில் இருந்து கிம் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியுள்ளன. இந்த வதந்திகள் பரவிய பிறகும் கூட கிம் பொதுவெளியில் தோன்றவேயில்லை.
ஏப்ரல் 14ம் தேதிதான், வட கொரியா ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியது. வசந்த பவனில், வடை சுடுவது போல, வட கொரியாவில், ஏவுகணை சோதனை என்பது அடிக்கடி நிகழக்கூடிய ஒரு நிகழ்வுதான்.

காயம்
அதேநேரம், இதற்கு அதிபர் அங்கீகாரம் தேவை. எனவே, ஏவுகணை சோதனை நடத்த, ஒப்புதல் அளிக்கும் அளவுக்கு கிம் ஜாங் உன் ஆரோக்கியமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதன்பிறகுதான், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. எனவே, ஏவுகணை சோதனையின்போதுதான், கிம் காயமடைந்திருக்க கூடும் என்று முன்னாள் தொழிலாளர் கட்சி அதிகாரி லீ ஜியோங் ஹோ தென் கொரிய செய்தித்தாள் டோங்-எ இல்போவில் எழுதியுள்ளார்.

வீடியோ வெளியாகவில்லை
"ஏவுகணை ஏவுதலின் எந்த காட்சிகளும் மற்றும் போர் விமானங்களின் பயிற்சியும் அரசால் வெளியிடப்படாத நிலையில், இந்த சந்தேகம் அதிகரிக்கிறது. ஏவுகணை ஏவுதலின்போது, தீ காரணமாக ஏற்படக்கூடிய எதிர்பாராத விபத்து நடந்திருக்கும் வாய்ப்பு இருப்பதை இந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டுகிறது," என்று அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி, தரையிலிருந்து மட்டுமல்லாது, விமானத்திலிருந்தும் ஏவுகணைகள் வீசப்பட்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பில்லை
இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து கிம் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் மவுண்ட் மியோஹைங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்ட அமெரிக்க ஊடக தகவல்களையும், கிம் மூளை சாவடைந்திருக்கலாம் இருக்கக்கூடும் என்று வெளியான தகவல்களையும் லீ நிராகரித்தார்.

டாக்டர்கள்
கிம் மவுண்ட் மியோஹைங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்ற செய்திகள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் கிம்மின் மருத்துவர்கள், தலைநகர் பியோங்யாங் நகரில்தான் உள்ளனர். எனவே, திடீரென வேறு மருத்துவர்களிடம் இதய அறுவை சிகிச்சை செய்ய தேவையே கிடையாது, என்கிறார், லீ ஜியோங் ஹோ.

நன்கு உள்ளார்
தென் கொரிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் சுங்-இன் மூன் நேற்று கிம் 'உயிருடன் இருக்கிறார்' என்றும் ஏப்ரல் 13 முதல் வொன்சானில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். கிம் இறந்துவிடவில்லை என்பதில் தனது அரசு உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications