பசி, பட்டினி.. ஏழ்மையில் தள்ளாடும் நாடுகள் பட்டியல் வெளியீடு.. முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?
வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலகில் வறுமையில் தாண்டவம் ஆடும் நகரங்களின் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் தெற்கு சூடான் நாடு உள்ளது.
எந்த ஒரு நாட்டிற்கும் வறுமை என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். மேலும் உலகின் பல நாடுகள் அதனுடன் போராடி வருகின்றன. குறிப்பாக வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு வறுமையை ஒழிப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. உலக அளவில் பணக்கார நாடுகள், செல்வாக்கு மிக்க நாடுகளின் பட்டியலிடப்படுவது போது வறுமை தாண்டவம் ஆடும் நாடுகளின் அவ்வப்போது வெளியிடப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலகில் வறுமையில் தாண்டவம் ஆடும் நகரங்களின் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்களின் அன்றாட தேவைகளுக்காக செலவிடப்படும் தொகை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. வாழ்கை தரம், மக்களின் வாங்கும் சக்தி உள்ளிட்டவையும் இதற்கான அளவீடுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் இடத்தில் தெற்கு சூடான்: போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் தெற்கு சூடான் நாடு முதலிடத்தில் உள்ளது. தெற்கு சூடானில் ஜிடிபி தனிநபர் வருமானம் என்பது $492.72 ஆக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற தெற்கு சூடான், உலகின் மிக இளமையான நாடாக அறியப்படுகிறது. அரசியல் நிலைத்தன்மை, உள்நாட்டு சண்டை, உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லாமை போன்றவற்றால் அந்த நாட்டின் வளர்ச்சி கடுமையாக திண்டாடி வருகிறது.

இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள நாடுகள் எவை எவை என்பதனை இங்கே பார்ப்போம். 2- ஆம் இடத்தில் புருண்டி உள்ளது. அதனைத்தொடர்ந்து, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, மொசாம்பிக், மாலாவி, நைகர், சாட், லைபிரியா, மடகாஸ்கர், என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் உள்ள நாடுகள் பெரும்பாலானாவை ஆப்பிரிக்க நாடுகள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
அடிப்படை பிரச்சினைகள்: ஏழ்மையான நாடுகளாக இருக்கும் இந்த நாடுகளில் பெரும்பாலும் பொதுவான பிரச்சினைகளே உள்ளன. அரசியல் நிலைத்தன்மை, உள்நாட்டு மோதல், உள்கட்டமைப்பு சரிவர இல்லாதது, பருவமழையை எதிர்பார்த்தே விவசாயத்தை நம்பியிருப்பது ஆகியவையே நாடுகள் கடுமையான வறுமையை எதிர்கொள்ள காரணமாக உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தட்ப வெப்பநிலையில், மாற்றம் ஏற்படுவதால் உணவு பாதுகாப்பு என்பதும் இங்கு கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நாடுகளில் நிலவும் வறுமை, அங்குள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இந்த அறிக்கை உள்ளது. உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வது, பொருளாதார பன்முகத்தன்மையை ஊக்குவித்தல், அரசியல் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது ஆகியவையே இந்த நாடுகளை பிரகாசமான வளர்ச்சியை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications