ஐ.நா. உரையில் ஜம்மு காஷ்மீர் பற்றி எதுவும் பேசாத மோடி! உலக நாடுகளுக்கு கொடுத்த ஸ்ட்ராங் மெசேஜ்
Recommended Video
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய உரையின் போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு வார்த்தையையும் உச்சரிக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய தினம் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

தனது உரையின்போது, உலக நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் பாடிய, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரியையும் அவர் அப்போது நினைவு கூர்ந்தார்.
உலகம் வெப்பமயமாதல் பிரச்சினையில் இந்தியா தீர்வை நோக்கியே பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது என்றும், உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவின் பங்களிப்பு என்பது குறைவாகவே இருக்கிறது, தீர்வு தான் அதிகமாக உள்ளது என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாடாக மாற்றுவதற்கான தீவிர முயற்சியை இந்திய அரசு எடுத்து வருகிறது. இந்தியாவில் மாபெரும் சுகாதார காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றெல்லாம் அவர் தெரிவித்தார்.
ஆனால் தனது உரையில் எந்த ஒரு இடத்திலும், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை. இதற்கு காரணம் ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று மத்திய அரசு உறுதியான முடிவில் உள்ளது. இதை சர்வதேச பிரச்சினையாக வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பும் நிலையில், திட்டமிட்டுதான், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக எந்த ஒரு வார்த்தையையும் மோடி பேசவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
இதன் மூலம் உலக நாடுகளுக்கு, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்தான் என்ற மெசேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி!












Click it and Unblock the Notifications