செவ்வாய் கிரகத்தில் மூன்றாவது முறையாக பறந்த இன்ஜெனுவிட்டி ஹெலிகாப்டர்.. வீடியோ வெளியிட்ட நாசா
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் மூன்றாவது முறையாக நாசாவின் குட்டி ஹெலிகாப்டர் இன்ஜெனுவிட்டி வெற்றிகரமாக பறந்தது. இதன் வீடியோவை பெர்ஸிவியரன்ஸ் ரோவர் வெளியிட்டுள்ளது.
Recommended Video
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதர்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தை படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது.

இந்த ரோவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இன்ஜெனியூனிட்டி என பெயரிடப்பட்டுழள்ள இந்த ஹெலிகாப்டரின் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
இதன் மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதல்முறையாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே திங்கள்கிழமையும் வியாழக்கிழமையும் என இருமுறை இன்ஜெனியூனிட்டி எனும் ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறந்தது.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக நேற்றைய தினம் இன்ஜெனுவிட்டி எனும் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்தது. 1.8 கிலோ எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர் 39.1 வினாடிகளுக்கு மேல் மூன்று மீட்டர் உயரத்திற்கு மேலெழும்பியது.
பூமியும் செவ்வாய் கிரகமும் தற்போது சுமார் 295 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. அதனால் வானிலை சமிக்கைகள் அந்த தூரத்தை கடக்க 16 நிமிடங்களுக்கு மேல் ஆகும். செவ்வாய்கிரகம் மிகவும் மெலிதான வளி மண்டலத்தை கொண்டதாகும். அதாவது இதன் அடர்த்தி பூமியில் வெறும் ஒரு சதவீதமாகும். இந்த ஹெலிகாப்டரில் வண்ண கேமரா உள்ளது.












Click it and Unblock the Notifications