அய்யோ! "217 முறை" கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?
வாஷிங்டன்: ஒரு முறை கொரோனா தடுப்பூசி போடுவதற்கே பலரும் பயந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த முதியவர் ஒருவர் 217 முறை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கதிமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் அவரது உடல் நலனில் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா? என மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா எனும் பெருந்தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது. உலக நாடுகளை ஒருசேர இந்த வைரஸ் முடக்கி போட்டது. சமூக இடைவெளி, முகக்கவசம், ஊரடங்கு என வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் படாத பாடு பட்டன.

பக்கத்து ஊருக்கு போகக் கூட பக்கத்து நாட்டிற்கு செல்வது போல கெடுபிடிகளை மக்கள் திண்டாடிப்போகினர். உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகே கட்டுக்குள் வரத் தொடங்கியது. 2021 ஜனவரியில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவின் ஃபைசர், ரஷ்யாவின் ஸ்புட்னிக், இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷில்டு தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும் பஙகாற்றின. கொரோனா வைரஸ் பல அலைகளாக உருவெடுத்ததால், இரண்டு, மூன்று டோஸ் வரை தடுப்பூசிகள் போடப்பட்டது. கோவிட் தடுப்பூசிகளால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது.
217 முறை தடுப்பூசி: எனினும் அறிவியல் பூர்வமாக இது 100 சதவிகிதம் நிரூபிக்கப்படவில்லை. ஒருமுறை கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கூட ஒரு சிலர் சுணக்கம் காட்டியதையும் பார்க்க முடிந்தது. ஆனால், ஜெர்மனியில் ஒருநபர் இதுவரை மொத்தம் 217 முறை கோவிட் தடுப்பூசி போட்டுள்ளாராம். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஜெர்மனியின் மக்தேபர்க் நகரில் வசித்து வருபவர் 62 வயது முதியவர். இவர் கடந்த ஜூன் 2021 முதல் நவம்பர் 2023 வரை 29 மாத கால இடைவெளிகளில் 217 முறை கொரோனா தடுப்பூசிகளை போட்டு இருக்கிறார். எந்த ஒரு மருத்துவ பரிசோதனைக்காகவும் இப்படி தாறுமாறாக தடுப்பூசி போடவில்லை. தானாக விருப்பப்பட்டே இப்படி தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார்.
கொரோனா தொற்று இல்லை: 134 முறை முறைப்படி மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட அந்த முதியவர் மீதமுள்ள 83 சுயமாகவே போட்டுள்ளாராம். அது போக 29 மாதங்களிலும் தொடர்ச்சியாக கொரோனா தனக்கு உள்ளதாக என தெரிந்து கொள்ள பிசிஆர் மற்றும் ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.
அளவுக்கதிமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருப்பதால் அவரது உடல் நலனில் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா? என மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தார்களாம். அதில் எதுவும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவில்லை. எனினும், அவரிடம் பரிசோதனை நடத்த மருத்துவ குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக மாதிரிகளை வழங்கவும் அந்த முதியவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எந்த பலனும் கிடைக்காது: இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதிலே அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால், அவருக்கு கொரோனா வர வாய்ப்பு இல்லை. இப்படி 217 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அவருக்கு கூடுதலாக வைரஸ்க்கு எதிராக எந்த பலமும் கிடைக்க போவது இல்லை" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications