நியூயார்க்கில் மோடி-ட்ரம்ப் இன்று சந்திப்பு.. வர்த்தக சிக்கல் உட்பட பல விவகாரங்கள் பற்றி பேச திட்டம்
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (யு.என்.ஜி.ஏவின் 74 வது அமர்வு) கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உரையாற்ற உள்ளார். பின்னர் பல இருதரப்பு ஆலோசனைகளையும் அவர் நடத்துவார்.

அப்போது இந்திய பிரதமர் மோடியையும், சந்திக்க உள்ள ட்ரம்ப், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது. இதில் வளர்ந்து வரும் இருதரப்பு வர்த்தக உரசல்கள், சாத்தியமான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் சமாதான முன்னெடுப்புகள் பற்றியும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சந்திப்பு நியூயார்க் உள்ளூர் நேரப்படி மதியம் 12.15 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு) தொடங்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் ஒன்றாக பங்கேற்றாலும், அது ஒரு பொது நிகழ்வாக நடைபெற்றதால், பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் இன்று இரவு 12 மணிக்கு (இந்திய நேரம்) நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மேடையில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர். இருவரும் கைகோர்ப்பார்களா அல்லது ஒருவருக்கொருவர் புறக்கணிப்பார்களா என்பது பற்றி பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் பங்கேற்க வந்துள்ள மோடியும், இம்ரான் கானும் இன்று இரவு 12 மணியளவில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே ஜம்மு-காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக மாற்ற பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அதிகரித்த பதற்றத்திற்கு மத்தியில் பிரதமர் மோடியும் இம்ரான் கானும் முதல் முறையாக ஒருவரை ஒருவர் சந்திக்கப் போகிறார்கள்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் வழங்கும் மதிய உணவில் இரு தலைவர்களும் ஒன்றாக உணவருந்த உள்ளனர்.
நேற்று, இம்ரான் கான் டிரம்பை சந்தித்து காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்த உதவி கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரு தரப்பினரும் அதை ஏற்றுக் கொண்டால்தான் மத்தியஸ்தம் சாத்தியம் என்று டிரம்ப் கூறிவிட்டார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications