Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளைக்கு இருப்பேன்னு நானே நம்பலை.. லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயில் தப்பிய இந்திய நடிகை! இவங்க தானா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பலியானோர் எண்ணிக்கை 25-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை தான் நேரில் பார்த்ததாகவும், நாளை உயிரோடு இருப்பேன் என நானே நம்பவில்லை என கூறியிருக்கிறார் பிரபல நடிகையான ப்ரீத்தி ஜிந்தா.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஏழாம் தேதி ஏற்பட்ட காட்டு தீ இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரிடராக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

los angeles preity zinta wildfire

கடும் வறட்சி காரணமாக அந்நகரின் பல பகுதிகளில் மரங்கள் செடி கொடிகள் காய்ந்திருந்ததோடு வேகமான காற்றும் வீசியதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு காட்டுத் தீயாக மாறி உள்ளது. கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை எப்படியாவது அணைத்து விட வேண்டுமென அமெரிக்கா போராடி வருகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ:

காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கி இருக்கின்றனர். தற்போது சுமார் 15,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றார். அமெரிக்கா. கனடா. மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 1400 தீயணைப்பு வாகனங்கள். 50 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில் பலத்த காற்று காரணமாக தீயை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

los angeles preity zinta wildfire

பலி எண்ணிக்கை:

தற்போதைய சூழ்நிலையில் 80 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் காற்றின் தாக்கம் காரணமாக தீயை அணைக்கும் பணி சற்று சுணக்கத்தை சந்தித்துள்ளது. மேலும் வரும் நாட்களிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 கடந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

பலி எண்ணிக்கை:

இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. தற்போதைய சூழலில் பொதுமக்கள் பலரும் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஈட்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் பாலிசேட்ஸ் பகுதியில் 8 பேரும், ஈட்டன் பகுதியில் 17 பேரும் மாயமானதாக கூறப்படுகிறது. காட்டுத் தீயின் காரணமாக 12 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ள நிலையில் காட்டுத் தீயின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

ப்ரீத்தி ஜிந்தா:

இந்த தீ விபத்தின் காரணமாக நான்கு முதல் ஐந்து லட்சம் கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரிடராக இந்த கலிபோர்னியா காட்டுத்தீ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் இந்திய நடிகை ஒருவரும் தப்பியதாக கூறப்படுகிறது. தமிழ் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவரும் பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தான் காட்டுத்தீயை தான் நேரில் பார்த்ததாக கூறியிருக்கிறார்.

காட்டுத் தீயால் அச்சம்:

லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தபோது காட்டுத்தீப் பரவலை தான் நேரில் பார்த்ததாக கூறியிருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. அவர் இருந்த பகுதிக்கு மிக அருகில் தான் காட்டுத் தீ மளமளவென பரவியதாகவும் இன்று மட்டுமே தனது வாழ்க்கை அடுத்த நாளை தான் பார்ப்பேனா என தனது மனதுக்குள் அச்சம் தோன்றியதாகவும், தனது நண்பர்களும் அருகில் இருந்த மக்களும் சாம்பல் புகை உள்ளிட்ட அவற்றின் தாக்கம் காரணமாக தப்பி ஓடியதை பார்த்ததாக கூறியுள்ளார். மேலும், குழந்தைகள் பெரியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காற்றும் கூட அமைதி கொள்ளாமல் தீவிரத்தை காட்டியது. இதை பார்த்து நான் மிகவும் மனம் நொறுங்கிப் போனேன். அதே சமயம் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+