சீனாவுக்கு செக்.. இந்தியாவை முக்கிய கூட்டாளியாக வைத்து அமெரிக்கா போட்ட பெரிய பிளான்!
வாஷிங்டன்: பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படும் அரிய வகை கனிமங்களின் சப்ளையை சீனா கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையே கனிமங்கள் சப்ளை குறித்து ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சேர்ந்த அமைப்பு குவாட் என்று சொல்லப்படுகிறது. இந்த குவாட் அமைப்பின் பிரதிநிதிகளின் கூட்டம் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், குவாட் நாடுகளுக்கு இடையே கனிம வளங்களை பகிர்ந்துக்கொள்ளுதல் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அதிலிருந்து பெறப்படும் பொருட்களின் உற்பத்திக்கு ஏதாவது ஒரு நாட்டை மட்டும் நம்பியிருப்பது, பொருளாதார ரீதியான நிர்பந்தம், விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிக்க வழிவகுக்கும். எனவே இந்த பிரச்சனையை சரி செய்ய குவாட் அமைப்புகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம்" என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
'Quad Critical Minerals Initiative' என்கிற பெயரில் வெளியான இந்த கூட்டறிக்கையின் முக்கிய நோக்கம், கனிம விநியோகச் சங்கிலியைப் பாதுகாத்து, அதை பன்முகப்படுத்துவது ஆகும். மேலும் சீனாவின் ஆதிக்கத்தை தகர்ப்பதும் இந்த கூட்டு நாடுகளின் முயற்சியின் நோக்கமாகும். சீனா தனது கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்றும் இந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
குவாட் அமைப்பு இப்படியான முடிவுக்கு வர சீனாவின் சப்ளை நிறுத்தம்தான் காரணம். ஆட்டோமொபைல் தொடங்கி ராணுவ தளவாடங்கள் உற்பத்தி வரை அரிய கனிமங்களின் தேவை இருக்கிறது. ஆனால் சீனா இந்த சப்ளையை நிறுத்தியதால் இந்தியா, அமெரிக்கா தொடங்கி உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் துறை கடுமையாக அடிவாங்கியிருக்கிறது. எனவேதான் குவாட் அமைப்பு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
அதேபோல தைவான் பிரச்சனை குறித்தும் இந்த அமைப்பு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. இதில் நேரடியாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல், "தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத செயல்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. இது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று இந்த அமைப்பு கூறியிருக்கிறது.
இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. "இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து சரியான முடிவுகளை எடுப்பதற்கு சுதந்திரமான தேர்வு அவசியமாக இருக்கிறது" என்று ஜெய்சங்கர் பேசியிருந்தார்.
ஜெய்ஷங்கரின் வலியுறுத்தலின் பேரில், காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை குவாட் நாடுகள் கண்டித்தன. மேலும், இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள், அதற்கு உதவியவர்கள் மற்றும் நிதியளித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தாமதமின்றி நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின.
பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் இந்தியா தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த விவகாரத்தில் மூன்றாவது நாடுகள் தலையிட கூடாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் தற்போது குவாட் அமைப்பகள் கண்டனம் தெரிவித்திருப்பதன் மூலம் இதில் மூன்றாவது நாடுகள் தலையீடு ஏற்பட்டிருக்கிறது.
-
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு.. டார்க்கெட் ஹார்முஸ் ஜலசந்தி -
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications