இந்துஸ்தானி இசை ஜாம்பவான் ஜஸ்ராஜ் மறைவு
வாஷிங்டன்: இந்துஸ்தானி இசை ஜாம்பவான் பண்டிட் ஜஸ்ராஜ் மரணமடைந்தார். அவருக்கு வயது 90.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் குடும்பத்தோடு வசித்து வந்த அவர் அந்த நாட்டு நேரப்படி, காலை 5.15 மணிக்கு இறந்தார். இந்திய நேரப்படி, திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணியாகும்.
மனைவி மதுரா, மகள் துர்கா மற்றும் மகன் ஷரங்க் தேவ் ஆகியோருடன் அவர் வசித்து வந்தார். மூன்று பத்ம விருதுகளை பெற்றவர் ஜஸ்ராஜ். (பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன்)

கிளாசிக்கல் பாடலுக்கும் தும்ரிஸுக்கும் பெயர் பெற்றவர் ஜஸ்ராஜ். மேலும் தனது சொந்த ராகத்தையும் உருவாக்கியுள்ளார். அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இசையை கற்பித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்தோடு ஓய்வெடுத்து வந்தார். "அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக பண்டிட் ஜஸ்ராஜ் இன்று காலை 5.15 மணிக்கு மறைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்" என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம், அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையை மேற்கோளிட்டுள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்களும், ஜஸ்ராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications