Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய தரைக்கடல் அடியில் சிக்கிய "பேய் துகள்" வியந்த விஞ்ஞான உலகம்! மர்மம் விலகுமா? ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய தரைக்கடலில் சக்தி வாய்ந்த பேய் துகள்(ghost particle) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரினோ டிடெக்டர் வாயிலாக இந்த பார்ட்டிகிள் கண்டறியப்பட்டுள்ளது. மனித குலத்தால் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே இதுதான் சக்தி வாய்ந்த நியூட்ரினோ பார்டிகிள் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். பேய் துகள் என்றால் என்ன? என்பது குறித்து ஆய்வாளர்கள் சொல்வதையும் இங்கு பார்க்கலாம்.

நாம் வாழும் இந்த பூமியில் இன்னும் மனிதனால் முழுமையாக கண்டுபிடிக்க முடியாத பல மர்மங்கள் நிலவுகின்றன. பூமி எப்படி உருவானது என்பது முதல், முதலில் உயிர்கள் எப்படி உருவானது என்பது வரை முழுமையாக விடை காண முடியாத பல விசித்திரங்கள் இந்த பூமியில் அடங்கியுள்ளன.

Earth Science Space

பேய் துகள்

இந்த மர்மங்களை கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கடலுக்கு அடியில் புதைந்துள்ள பல மர்மங்களுக்கு விடை தெரிந்தால் பூமியின் தோற்றம் குறித்த ஆராய்ச்சியில் முக்கிய திருப்புமுனை ஏற்படும் என நம்பப்படுகிறது. இதனால் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான் மத்திய தரைக்கடலில் சக்தி வாய்ந்த பேய் துகள்(ghost particle) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரினோ டிடெக்டர் வாயிலாக இந்த பார்ட்டிகிள் கண்டறியப்பட்டுள்ளது. மனித குலத்தால் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே இதுதான் சக்தி வாய்ந்த நியூட்ரினோ பார்டிகிள் என்றும் இதன் மூலம் நியுட்ரினோ புரிந்து கொள்ளும் முயற்சியில் இன்னும் முன்னேறி கொண்டு செல்லும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மத்திய தரைக்கடலின் அடிப்பகுதியில் இந்த நியூட்ரினோ மேம்பட்டு வருகிறதாம்.

30 மடங்கு சக்தி வாய்ந்தது

பூமியில் இதுவரை கண்டறியப்பட்ட துகள்களை விட 30 மடங்கு ஆக்டிவாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இந்த துகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த துகளானது பால்வழி அண்டத்திற்கு வெளியில் இருந்து வந்து இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். KM3NeT என்றும் அழைக்கப்படும் கியூபிக் கிலோமீட்டர் நியூட்ரினோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த துகள்களை கண்டறிந்துள்ளனர்.

பேய் துகள் என்றால் என்ன?

நாம் வாழும் இந்த பூமியில் நம்மை சுற்றி இன்னும் நம்மால் முழுமையாக அறிய முடியாத மர்மமான 'பேய்' துகள்கள் (Ghost particles) உள்ளதாகவும், இந்த பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மை பற்றிய நமது புரிதலை மேம்படுத்த அவை உதவும் என்றும் சில இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். இதுபோன்ற துகள்களைக் கண்டறிய தற்போது பயன்பாட்டில் உள்ள கருவிகளை விட ஆயிரம் மடங்கு அதிக உணர்திறன் கொண்ட ஒரு புதிய கருவி இந்த சோதனையில் பயன்படுத்தப்படும்.

நியூட்ரினோக்களை பொறுத்தவரை நட்சத்திரங்களில் இருந்து வெளிப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றின் மிகக் குறைந்த நிறை மற்றும் கண்டறிய முடியாமல் இருப்பதன் காரணமாக இவை பேய் துகள் என்று அழைக்கப்படுகின்றன. பிரபஞ்சத்தில் இரண்டாவது அதிகம் காணப்படும் துகள்கள் நியூட்ரினோதான் எனவும் இவை எந்த மின்சக்தியும் கொண்டு செல்வது இல்லை எனவும், மனித உடல்வழியாக பெரிய எண்ணிக்கையில் அதாவது பல டிரில்லியன் எண்ணிக்கையில் நியூட்ரினோக்கள் கடந்து செல்லும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இத்தாலிய ஆய்வாளர் ரோசா கோனிகிலியோன் இது தொடர்பாக கூறுகையில், " நியூட்ரினோக்கள் பூமியை அடையும் போது பிரபஞ்சத்தின் சிறப்பு தூதர்களாக" செயல்படுகின்றன. அவை பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதிகளைப் பற்றிய ஒரு பார்வையை(glimpse) வழங்குகின்றன. நியூட்ரினோக்களை தாங்களாகவே கண்டறிவது விஞ்ஞானிகளுக்கு கடினமாக இருந்தாலும், நியூட்ரினோக்கள் பொருளுடன் தொடர்பு கொள்ளும்போது என்ன நடக்கிறது என கவனிக்க முடிகிறது" எனவும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+