அமெரிக்காவில் பிறந்த நாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு.. கால்பந்து வீரர் உள்பட 4 பேர் பலி.. சோகம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களை நோக்கி திடீரென ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அவ்வப்போது திடீரென நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிர வைத்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனைவருக்கும் அனுமதி உள்ள நிலையில், இதற்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று தற்போதும் குரல் வலுத்து வருகிறது.

Shooting at a birthday party, the celebration ended in tragedy - 4 people killed in US

இது ஒருபக்கம் இருந்தாலும் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. நடப்பு ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் 143 முறை நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் எந்த அளவிற்கு துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து இருப்பது என்பதற்கு இதுவே சான்றாகும்.

இந்த நிலையில், அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணமான அலபாமாவில் உள்ள தாட்வில்லே நகரில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஒரு நடன விடுதியில் 16 வயது நபர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் பலரும் சிறுவர்கள் சிறுமியர்கள் ஆவர்.

இந்த நிலையில், திடீரென ஒருவர் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயம் அடைந்துள்ளனர். பிறந்த நாள் பார்ட்டியின் போது ஏற்பட்ட தகராறில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

எனினும், இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான கரணம் குறித்து உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அதிகரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Shooting at a birthday party, the celebration ended in tragedy - 4 people killed in US

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் டீன் ஏஜ் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் மருத்துவமனைக்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+