விண்வெளிக்கு பறக்கும் இந்திய பெண்மணி... சாதனை நிகழ்த்த தயாராகும் சிரிஷா பந்தலா..!
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சிரிஷா பந்தலா என்ற பெண்மணி, விண்வெளி பயணம் மேற்கொண்டு சாதனை நிகழ்த்தவுள்ளார்.
Recommended Video
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த சிரிஷா பந்தலா, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தான் வளர்ந்தார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலட்டிக் யூனிட்டி என்ற விண்கலம் மூலம் இம்மாதம் விண்வெளிக்கு பறக்கவிருக்கிறார். கல்பனா சாவ்லாவுக்கு பிறகு விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது பெண்மணி ஆவார்.

விண்வெளியில் கால்பதித்த இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமையை அவர் அடையவுள்ளார். விர்ஜின் கேலடிக் விண்கலத்தில் சிரிஷா பந்தலாவுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பறக்கவுள்ளனர். கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பு கிடைத்தமைக்காக இந்திய வம்சாவளி பெண்ணான சிரிஷாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜூலை 11-ம் தேதி நியூ மெக்ஸிகோவில் இருந்து இந்த விண்வெளி பயணம் தொடங்கவிருக்கிறது. அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அமைப்பானது கடந்த வாரம் தான் விர்ஜின் கேலட்டிக் விண்கல நிறுவனத்திற்கு ஒப்புதலே அளித்தது.
விண்வெளிக்கு பறக்கவிருக்கும் சிரிஷா பந்தலா, கடந்த 2015-ம் ஆண்டு விர்ஜின் கேலட்டிக் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோ நாட்டிக்கல் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார்.
சிரிஷா பந்தலாவுக்கு முன்னதாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் என எடுத்துக்கொண்டால் மொத்தமே 3 பேர் தான். கல்பனா சாவ்லா, ராகேஷ் சர்மா, சுனிதா வில்லியம்ஸ், ஆகியோருக்கு பிறகு சிரிஷா இந்த சாதனையை நிகழ்த்திக்காட்டவுள்ளார்.











Click it and Unblock the Notifications