அமெரிக்காவில் அதிகார மாற்றத்திற்கு ஒப்புதல்.. வேறு வழியின்றி பணிந்தார் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிகார மாற்றத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதை அடுத்து தனது உதவியாளரின் ட்விட்டர் கணக்கு மூலமாக அறிக்கை வெளியிட்டார்.
கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். எனினும் அதை ஏற்க மறுத்த டிரம்ப், நீதிமன்றங்களை நாடினார்.
இதையடுத்து ஜோ பிடனை அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடின. அப்போது இதை தடுத்து நிறுத்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

மீண்டும் அவைகள் கூடின
உலகமே காரித் துப்பும் அளவுக்கு இந்த வன்முறையில் டிரம்பின் பங்களிப்பு உள்ளது தெரியவந்தது. சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் வன்முறை முடிவுக்கு வந்தது. மீண்டும் இரு அவைகளும் கூடின.

எத்தனை இடங்களில் வெற்றி
அப்போது ஜோ பிடன் வெற்றியை அறிவிப்பதற்கான விவாதத்தின் மீது உறுப்பினர்கள் பேசி வந்தார்கள். அமெரிக்காவில் ஆட்சி அமைக்க 270 தேர்தல் சபை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் ஜோ பிடன் 306 இடங்களிலும் டிரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது.

ஜோ பிடன்
இதையடுத்து நீண்ட நாட்களாக ஜோ பிடன் வெற்றியை ஒப்புக் கொள்ளாமல் இருந்த டிரம்ப், நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து தனது சமூக வலைதள உதவியாளர் டான் ஸ்காவினோவின் ட்வீட் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சட்ட ரீதியில் அதில் டொனால்ட் டிரம்ப் கூறுகையில் தேர்தல் முடிவுகளில் நான் முற்றிலும் உடன்படாவிட்டாலும் ஜனவரி 20-ஆம் தேதி முறையாக அதிகார மாற்றம் நடைபெறும். உண்மைகள் எப்போதும் என்னை இந்த பதவியிலிருந்து வெளியேற்றாது. நான் எப்போதும் சொல்வது போல் நியாயமான ஓட்டுக்களே எண்ணப்பட்டதை உறுதி செய்ய சட்டரீதியாக போராடுவோம். அதில் டொனால்ட் டிரம்ப் கூறுகையில் தேர்தல் முடிவுகளில் நான் முற்றிலும் உடன்படாவிட்டாலும் ஜனவரி 20-ஆம் தேதி முறையாக அதிகார மாற்றம் நடைபெறும். உண்மைகள் எப்போதும் என்னை இந்த பதவியிலிருந்து வெளியேற்றாது. நான் எப்போதும் சொல்வது போல் நியாயமான ஓட்டுக்களே எண்ணப்பட்டதை உறுதி செய்ய சட்டரீதியாக போராடுவோம்.
அதில் டொனால்ட் டிரம்ப் கூறுகையில் தேர்தல் முடிவுகளில் நான் முற்றிலும் உடன்படாவிட்டாலும் ஜனவரி 20-ஆம் தேதி முறையாக அதிகார மாற்றம் நடைபெறும். உண்மைகள் எப்போதும் என்னை இந்த பதவியிலிருந்து வெளியேற்றாது. நான் எப்போதும் சொல்வது போல் நியாயமான ஓட்டுக்களே எண்ணப்பட்டதை உறுதி செய்ய சட்டரீதியாக போராடுவோம்.

பதவிக்காலம்
அதிபர் வரலாற்றில் முதல் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை காட்டும் நிலையில் அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்ற நமது போராட்டத்தின் தொடக்கம் இதுவாகும் என்று டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications