Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசாவில் 60 நாட்கள் போர் நிறுத்தம்? நிபந்தனைகளுக்கு ஓகே சொன்ன இஸ்ரேல்.. டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்ட நிலையில், தீர்வு எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில், காசாவில் 60 நாள் நிறுத்தம் செய்வதற்கான திட்டம் மற்றும் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக யுத்தம் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்காமல் ஓய மாட்டோம் என இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இருப்பிடத்தை இழந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளனர்.

Israel Hamas America

இஸ்ரேல் சம்மதம்

இஸ்ரேல்- ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும், தற்போது வரை தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில்தான், காசாவில் 60 நாள் நிறுத்தம் செய்வதற்கான திட்டம் மற்றும் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் கூறியிருப்பதாவது:- காசா விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுடன் எனது பிரதிநிதிகள் நீண்ட பேச்சுவார்த்த்தையை மேற்கொண்டனர். 60 நாள் போர் நிறுத்தத்திற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி ஏற்பாடு செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

போரை நிறுத்தினால்

ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை விட சிறந்த ஒப்பந்தம் இருக்காது. இதை ஏற்காவிட்டால் மோசமானதாகவே அமையும்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஹமாஸ் இது தொடர்பாக கூறுகையில், "போரை நிறுத்தினால் தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க தயார்" என்று ஹமாஸ் அமைப்பு கூறியிருந்தது.

அதேநேரத்தில் ஹமாஸ் வசம் இருக்கும் அனைத்து ஆயுதங்களும் ஒழிக்கப்பட்டால்தான், போர் நிறுத்தம் ஏற்படும் என்று இஸ்ரேல் கூறியது. இதற்கு ஹமாஸ் மறுப்பு தெரிவித்தது. இதனால், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதில் உடன்பாடு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

56,000 பேர் கொல்லப்பட்டதாக

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்க்குள் புகுந்து அதிரடியாக தாக்கினர். 1,200 பேர் கொல்லபட்டதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகவும் பிடித்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து, ஹமாஸ் மீது முழு அளவிலான போரை இஸ்ரேல் தொடுத்தது. இஸ்ரேலின் தாக்குதலில் 56 ஆயிரம பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலினால், காசாவில் பல லட்சக்கணக்கான மக்கள் பசியும் பட்டினியையும் எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச அமைப்புகளும் கவலை தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் கடந்த வாரத்தில் கடுமையான மோதல் வெடித்தது. 12 நாட்கள் இருநாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செயத்திலும் முக்கிய பங்காற்றியதாக டிரம்ப் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+