நீதிமன்றத்தில் அவமானப்பட்ட டிரம்ப்! பரஸ்பர வரி செல்லாது என நீதிபதிகள் சொன்னது ஏன்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒழுங்காக போய்க்கொண்டிருந்த உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய குழப்பதை டிரம்ப் ஏற்படுத்தியிருந்தார். பரஸ்பர வரி என்று சொல்லி இந்தியா உட்பட அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் வரியை விதித்திருந்தார் டிரம்ப். ஆனால், இந்த வரி இனி செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதனால் டிரம்ப் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரியை விதிக்கிறதோ, அதே அளவுக்கு மற்ற நாடுகள் மீதும் வரியை விதிப்பது தான் பரஸ்பர வரி என்று சொல்லப்படுகிறது. இது குறித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில், பரஸ்பர வரி என்பதே சட்டவிரோதம் என்று கூறியிருக்கிறது.

Trump Supreme Court ruling 2026

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், நீதிபதிகள் சோட்டோமேயர், காகன், ஜாக்சன் மற்றும் கன்சர்வேட்டிவ் நீதிபதிகளான நீல் கோர்சச், ஆமி கோனி பாரெட், கிளாரன்ஸ் தாமஸ் மற்றும் சாமுவேல் அலிட்டோ ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் மொத்தம் 6 நீதிபதிகள் பரஸ்பர வரி தவறு என்றும், 3 நீதிபதிகள் சரி என்றும் கூறினர். பெரும்பான்மை கருத்து ஏற்கப்படும் என்பதால், பரஸ்பர வரி தவறு என்கிற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த விஷயத்தை பொறுத்தவரை, நீதிமன்றம் சிம்பிளான வாதங்களைதான் முன்வைத்து. அதாவது வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு கிடையாது, மாறாக நாடாளுமன்றத்திற்கே இருக்கிறது என்பதுதான் அந்த வாதம். டிரம்ப் வரியை விதிக்க 1977ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'அவசரக்கால பொருளாதார அதிகாரம்' சட்டத்தை பயன்படுத்தியிருந்தார். ஆனால், இந்த சட்டம் வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்த மட்டும்தான் கொண்டுவரப்பட்டது என்றும், புதிய வரிகளை விதிக்க அதிகாரம் கொடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், வரி விதிக்கும் அதிகாரத்தை நிர்வாக தரப்பினரிடம் கொடுக்கவில்லை. அதாவது அதிபரோ, துணை அதிபரோ நேரடியாக வரியை போட முடியாது. மாறாக, நாடாளுமன்றம்தான் வரியை விதிக்க முடியும். இதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியவுடன் கடும் டென்ஷன் ஆன டிரம்ப், நீதிபதிகள் மீது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். தன்னால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே தனக்கு எதிராக தீர்ப்பு கொடுத்திருப்பதை டிரம்ப் ஏற்கவில்லை.

அதேபோல பரஸ்பர வரிக்கு பதிலாக, அரசியலமைப்பு சட்டம் 122ஐ பயன்படுத்தப்போவதாக டிரம்ப் கூறியிருக்கிறார். இந்த சட்டத்தின் கீழ் 15% வரை வரியை போட முடியும். ஆனால், 150 நாட்கள் வரைதான் இந்த வரிகள் இருக்கும். அதன் பின்னரும் வரி தொடர வேண்டும் எனில், நாடாளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

தற்போது இந்த சட்டத்தை பயன்படுத்தி டிரம்ப் 10% வரியை விதித்திருக்கிறார். இந்த வரி காரணமாக இந்தியாவுக்கான அமெரிக்காவின் வரி 18+10 என மொத்தம் 28% ஆக அதிகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+