பிரேசிலுக்கு 50% வரி.. இந்தா புடிச்சுக்கோ! டிரம்ப் சொல்லும் காரணத்தை கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், தொட்டதுக்கெல்லாம் வரியை போட்டு வருகிறார். குறிப்பாக, இன்று பிரேசிலுக்கு 50% கூடுதல் வரியை விதித்திருக்கிறார். இதற்காக அவர் சொல்லியிருக்கும் காரணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
பிரேசிலின் தற்போதைய அதிபராக சில்வா இருக்கிறார். இதற்கு முன்னர் நடந்த அதிபர் தேர்தலில் அப்போது அதிபராக இருந்த வலதுசாரியாளர் போல்சனாரோ, தேர்தலில் மோசடி செய்து, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து, தூய்மைப்படுத்தும் வேலையில் டிரம்ப் இறங்கியிருக்கிறார்.

ஆம், அவர் மிகவும் நியாயமானவர், புனிதமானவர். எனவே, அவர் மீதான விசாரணையை கைவிட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பிரேசில் அரசு, டிரம்பின் பேச்சை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளவில்லை. எனவே தனது பேச்சை கேட்காத பிரேசிலுக்கு 50% கூடுதல் வரியை போட்டிருக்கிறார்.
டிரம்ப் இப்படி அக்கப்போர் செய்வது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னர் தனது ஆதர்ச தோழனான, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் ஜாமீன் கோரி ஆஜராகியிருந்தார். இவர் அமெரிக்க அதிபரா? அவசர கால வழக்கறிஞரா? என்று தெரியாத அளவுக்கு தற்போது இறங்கி வந்திருக்கிறார்.
ஆனால் விவரமறிந்தவர்கள், பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட வரியை போல்சனாரோவுடன் தொடர்புபடுத்தி பார்க்கவில்லை. பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில் எடுத்து வரும் முன் முயற்சிகள் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. எனவேதான், பிரேசிலுக்கு எதிராக வரியை டிரம்ப் போட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதாவது, அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக சில முயற்சிகளை பிரேசில் எடுத்து வருகிறது. டாலரில் வர்த்தகம் செய்யாமல் தனது சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய முன் வந்திருக்கிறது.
மட்டுமல்லாது பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனால், ஏற்கெனவே டிரம்ப் பிரேசில் மீது ஒரு கண் வைத்திருந்தார். தற்போது சரியான நேரம் பார்த்து பழிவாங்கியுள்ளார் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மட்டுமல்லாது ஈரான், பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களையும் பிரிக்ஸ் நாடுகள் கண்டித்திருக்கின்றன. வரி விஷயத்தில் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல் பிரிக்ஸ் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது எல்லாம் பிரேசிலில் நடந்த மாநாட்டில் நடந்த விஷயங்கள். எனவே தனக்கு எதிரான நடவடிக்களுக்கு எப்படி இடம் கொடுக்கலாம் என்கிற கோபமும் பிரேசில் மீது அமெரிக்காவுக்கு இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் டிரம்ப் வரியை விதித்திருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications