உதவியாளரின் ட்விட்டர் அக்கவுண்ட்டை கடன் வாங்கி ட்வீட் போட்ட டிரம்ப்.. ரொம்ப கேவலம்
வாஷிங்டன்: ட்விட்டர் அக்கவுண்ட்டை கடன் வாங்கி டொனால்ட் டிரம்ப் ட்வீட் போட்ட சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகார வெறி பிடித்தால் என்னென்ன அவமானங்கள் நடைபெறும் என்பதற்கு டிரம்ப் மிகச் சிறந்த உதாரணமாவார்.
பார்த்தாலே போதும் சிரிப்பை வரவழைப்பவர் டிரம்ப். ஆரம்பத்தில் இவருக்கும் வடகொரிய அதிபர் கிம்மிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல்கள் சிரிப்பை வரவழைத்ததாக இருந்தன.
ஒரு அதிபரை இன்னொரு நாட்டு அதிபர் இத்தனை கேவலமாக பேசியதாக வரலாறே இல்லை என சொல்லலாம். அந்த வகையில் காமெடி செய்து வந்த டிரம்ப், தற்போது முழு ஆக்ஷனில் இறங்கிவிட்டார்.

வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் பெற்ற வெற்றியை ஏற்க மறுத்து நாடாளுமன்றக் கட்டடத்தில் வன்முறையை தனது ஆதரவாளர்கள் மூலம் தூண்டிவிட்டுள்ளார். இதனால் உலக தலைவர்கள் அமெரிக்காவின் நிலையை ஏளனம் செய்கிறார்கள்.

போராட்டம்
அமெரிக்காவில் வன்முறை, போராட்டங்களை ஒரு போதும் ஏற்க முடியாது என்றவர்தான் இந்த டிரம்ப். கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட போது கருப்பினர்த்தவர்கள், வெள்ளை இனத்தவர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்க மாட்டேன் என முழங்கினார்.

போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
ஆனால் அன்று நியாயத்துக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என்ற டிரம்ப் இன்று தனது அதிகார வெறியால் 4 உயிர்கள் பறி போன சம்பவத்திற்கு என்ன சொல்ல போகிறார்? வன்முறை தவறு என தெரிந்தும் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ஒரு ட்வீட் போட்டார்.

சமூகவலைதளங்கள் முடக்கம்
இதையடுத்து டிரம்பின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டது. இதனிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜோ பிடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அப்போது தனது உதவியாளர் ஒருவரின் ட்விட்டர் கணக்கை சிறிது நேரத்திற்கு கடன் வாங்கி ட்வீட் போட்டார் டிரம்ப். இது கேவலத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications