அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் சார்லட், வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்லட்-மெக்லன்பர்க் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சான்டி டிஎலோசுவா கூறுகையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது ஒரே நபர்தான் என்று சந்தேகிக்கிறோம், மேலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். கலிபோர்னியா நேரப்படி மாலை 5.45 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பல்கலைக்கழகத்தின், கென்னடி ஹால் பகுதியில் நடந்துள்ளது.
"பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சியடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு வீரர்கள் தீரத்தோடு சென்று மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார் சார்லட் மேயர் வி லைல்ஸ்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் துப்பாக்கிச் சூடுகள் நடைபெறுவது அமெரிக்காவில் சகஜமாகிவிட்டது. 2007ம் ஆண்டு, விர்ஜினியா, பிளேக்பர்க் பல்கலைக்கழகத்தில் தென் கொரியா மாணவர், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 32 பேர் கொல்லப்பட்டனர். பிறகு அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது மிகப்பெரிய தாக்குதல் என்றபோதிலும், இதன்பிறகு, அவ்வப்போது அமெரிக்காவில் துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து கொண்டேதான் உள்ளன.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications