Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானுக்கு எதிராக ஒன்று கூடும் பெரும் நாடுகள்.. அமெரிக்காவுடன் கைகோர்க்க தயார்.. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் பதிலடி ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. அமெரிக்க தளங்கள் மீதான டிரோன் தாக்குதல்களை அடுத்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பே முக்கியம் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

கீர் ஸ்டார்மர், இமானுவேல் மேக்ரான், ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர், ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகள் மீது நடத்திய "பொறுப்பற்ற" தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இந்த தாக்குதல்கள் நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

UK France and Germany Ready to Coordinate With US Amid Rising Middle East Tensions

குண்டுகளால் குலுங்கிய ஈரான்

தொடர்ந்து ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அமெரிக்கா நேற்று முன் தினம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது திடீரென கடுமையான தாக்குதலை தொடுத்தது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இரு நாட்டு படைகளும் கூட்டாக நடத்திய தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் பெரும் சேதமடைந்தன.

தொடர்ந்து போர் விமானங்கள் குண்டு வீசியதில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரம் குலுங்கியது. அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் என ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தன. மேலும் அன்றைய தினமே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியும் கொல்லப்பட்டார்

அமெரிக்காவுக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆதரவு

இதேபோன்று ஈரான் ராணுவ மந்திரி அசிஸ் நாசிர்சாடே, ராணுவ தளபதி அப் துல் ரகிம் மவுசவி, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பக்பூர், ராணுவ ஆலோசகர் அலி சம்கானி என அடுத்தடுத்து தலைவர்கள் உயிரிழந்தனர். இதனால் கடும் கோபமடைந்த ஈரானும் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தலைமை அலுவலகத்தை குறிவைத்தும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்தும் ஏவுகணைகளை தொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தெரிவித்துள்ளன.

ஈரான் ஏவுகணைகளை பலவீனப்படுத்த

தங்கள் நலன்களையும், கூட்டாளிகளின் (அமெரிக்கா) நலன்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக மூன்று நாடுகளும் வலியுறுத்தின. "தேவையான மற்றும் விகிதாசார தற்காப்பு நடவடிக்கைகளை" ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளன. ஈரானின் ஏவுகணை, டிரோன் திறனை பலவீனப்படுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

இரு நாடுகளின் தீவிரப் போரால் மோசமடைந்து வரும் சூழ்நிலையைச் சமாளிக்க அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஒப்புக்கொண்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் அக்ரோடிரி ராணுவத் தளத்தை ஒரு டிரோன் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டது.

அவசர மீட்டிங்

பிரான்ஸில், கடற்படைத் தளக் முகாமில் டிரோன் தாக்கியதாக அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று தெரிவித்தார். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தவிர, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்களும் நேற்று காணொலி அவசரகால மீட்டிங் நடத்தினர்.

அப்போது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்த அவர்கள், தங்கள் பிரதேசங்களிலும் ஜோர்டானிலும் அமெரிக்க ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+