என்னை பதவியில் இருந்து நீக்கினால்... வன்முறை அதிகரிக்கும்... எச்சரிக்கும் டிரம்ப்
வாஷிங்டன்: அதிபர் பதவியிலிருந்து தன்னை நீக்கினால் வன்முறை பல மடங்கு அதிகரிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார், இருப்பினும், இத்தேர்தலில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார்.
மேலும், தேர்தல் முடிவுகளை மாற்றவும் டிரம்ப் கடைசி வரை பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இருப்பினும், அதில் டிரம்பால் வெற்றி பெற முடியவில்லை.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு கடந்த 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. அப்போது உள்ளே புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

பதவி நீக்க மசோதா
இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கும் மசோதாவையும், அவர்கள் முன்மொழிந்தனர்.

வன்முறை அதிகரிக்கும்
இந்நிலையில் மெக்சிகோ எல்லையில் கட்டப்பட்டு வரும் சுவரைப் பார்வையிட்ட டிரம்ப், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிபர் பதவியிலிருந்து தன்னை நீக்கினால் வன்முறை பல மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். கடந்த புதன்கிழமை, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்கவும் அவர் மறுத்துவிட்டார்.

பைடனுக்கு தான் ஆபத்து
சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்துவதால் தனக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அவ்வாறு தன்னை அதிபர் பதவியில் இருந்து நீக்க முயற்சி நடந்தால், அது அடுத்து அமையவிருக்கும் பைடன் அரசுக்கே அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறிய டிரம்ப், இதனால் ஜனநாயகக் கட்சியினர் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

பேசியது தவறில்லை
மேலும், ஆதரவாளர்களை நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு, தேர்தல் முடிவுகளை மாற்ற அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தியது சரியான அணுகுமுறையே என்றும் அதில் தவறு இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட வன்முறைகளின்போது தலைவர்களைப் பேசியதுடன் ஒப்பிட்டால் தனது பேச்சு தவறானது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications