"கிரீன் கார்டு!" பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முன் வந்த மாஸ் அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்
வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்லும் நிலையில், கிரீன் கார்டு தொடர்பாக அமெரிக்கா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் அதிகப்படியாகச் சென்று செட்டிலாகி வருகின்றனர். குறிப்பாக ஐடி துறையில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால் அவர்களின் தேவையும் வெளிநாடுகளில் அதிகமாகவே இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் இருந்து அதிக பேர் அமெரிக்காவுக்குச் சென்று வருகின்றனர். அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு அங்கே கிரீன் கார்டு வாங்குவதே லட்சியமாக இருக்கும். இதற்கிடையே இது குறித்து பைடன் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி: அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தில் ஒரு பகுதியாக வரும் ஜூன் 22ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தில் அவர் பல முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில் அங்கே கிரீன் கார்டுகளுக்கு அப்ளை செய்வது தொடர்பான விதிமுறைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இது அங்கே கிரீன கார்டுக்கு அப்ளை செய்யும் இந்தியர்களுக்குப் பெரியளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் முக்கியம்: கிரீன் கார்டை நாம் நிரந்தர குடியுரிமை அட்டை எனப் புரிந்து கொள்ளலாம். அதாவது வெளிநாடுகளில் இருந்து வருவோர் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கலாம் என்பதையே இந்த கிரீன் கார்டு குறிக்கிறது. அமெரிக்க குடிவரவு சட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.40 லட்சம் பேருக்கு கிரீன் கார்டுகளை வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கிரீன் கார்டுகளில் அதிகபட்சம் 7% மட்டுமே குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும். அதாவது 100 கார்டுகளை வழங்குகிறார்கள் என்றால் ஒரே நாட்டை சேர்ந்த 7 பேருக்கு மட்டுமே கிடைக்கும்.

என்ன செய்ய வேண்டும்: அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய ஒரு சமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விதியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். எடுத்தவுடன் ஒருவரால் கிரீன் கார்டிற்கு நேரடியாக அப்ளை செய்ய முடியாது. இந்த விண்ணப்பத்திற்கு அப்ளை செய்யவும் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அந்த அனைத்து நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே கிரீன் கார்டிற்கு அப்ளை செய்ய முடியும்.
அதாவது இதற்கு விண்ணப்பிக்கும் நபர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் வந்திருக்க வேண்டும். அவர்களிடம் உரிய non-immigrant status இருக்க வேண்டும். அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த ஒருவரின் விண்ணப்பம் எடுத்துக் கொள்ளப்படும். அவர்களின் குற்றப் பின்னணி குறித்தும் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள். கிரீன் கார்டிற்கு அங்கே ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்.
யாருக்கு அதிக பயன்: இதற்கிடையே இந்த கிரீன் கார்டு அப்ளை செய்யும் நடைமுறையில் தான் அமெரிக்க அரசு இப்போது தளர்வுகளை அறிவித்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உதவும். குறிப்பாக ஏற்கனவே அமெரிக்காவில் பல ஆயிரம் இந்தியர்கள் கிரீன் கார்டிற்கு அப்ளை செய்துவிட்டுக் காத்திருக்கும் நிலையில், இந்த தளர்வுகள் குறித்த அறிவிப்பு அவர்களுக்கே மிகப் பெரியளவில் உதவும் என்று கூறப்படுகிறது.
-
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
சமையல் எரிவாயு விலை உயர்வு.. LPG உயர்விற்கு பின் உள்ள உண்மையான காரணம் என்ன? - முழு பின்னணி -
இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்! கதிகலங்க வைக்கும் நேரடி அனுபவம் -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி -
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வந்தால்.. செல்போன் டவர் கூட எடுக்காது? உண்மை என்ன? அதிர்ச்சி பின்னணி -
ஒரே வாரத்தில்.. 28% க்கும் மேல் வளர்ச்சி அடைந்த அதானி டோட்டல் கேஸ்.. சர்ரென உயர்வு! பின்னணி என்ன? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!












Click it and Unblock the Notifications