"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
வாஷிங்டன்: வளைகுடாவில் நடக்கும் போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் மறுபுறம் மிரட்டல்கள் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே ஈரானுக்கு இறுதி எச்சரிக்கையை விடுக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் மிக மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. இந்த போரால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தொடர்கிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் இதனால் சர்வதேச அளவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதாவது வளைகுடா போரின் வலிகளை ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொள்கிறது.

டிரம்ப்
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் கூட அதில் பெரிய பலன் கிடைப்பதில்லை. இதற்கிடையே வளைகுடா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில பகீர் தகவல்களைக் கூறியுள்ளார். ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர, தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக டிரம்ப் தெரிவித்தார். விரைவில் ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை அல்லது ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படவில்லை என்றால் ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா மிகப் பெரிய ஒரு தாக்குதலை நடத்தும் என அவர் எச்சரித்தார்.
மிரட்டல்
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரானில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு புதிய, நியாயமான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் இப்போது பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், அல்லது ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக சரக்கு கப்பல்களுக்குத் திறக்கப்படவில்லை என்றால்.. ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றை அமெரிக்கா முழுமையாகத் தகர்க்கும்.
இதுவரை நாங்கள் இதன் மீது ஒரு தாக்குதல் கூட நடத்தாமல் இருந்து வருகிறோம். ஈரானின் 47 ஆண்டுக்கால பயங்கரவாத சகாப்தத்தில் எங்கள் பல வீரர்களைக் கொன்றதற்கான பதிலடியாகவே இந்த நடவடிக்கைகள் இருக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், டிரம்பின் இந்த போஸ்ட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குழப்பம் டிரம்ப்
முன்னதாக கடந்த வாரம் தான் ஈரான் மீதான மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் முதலில் மிரட்டினார். பிறகு அவரே திடீரென அடுத்த 10 நாட்களுக்குத் தாக்குதலை நிறுத்தி வைப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு எரிசக்தி உட்கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி
- ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே
- திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே
- கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல்
- பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி
ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமான சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா பிரஷர் போடுகிறது. ஆனால், இந்தியா உட்பட 5 நாடுகளின் சரக்கு கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதிக்கிறது. இது போர் காலம் என்பதால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்













Click it and Unblock the Notifications