அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் பலி, 12 பேர் படுகாயம்.. நள்ளிரவில் பரபர சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியா தலைநகர் சேக்ரமென்டோவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்தத் துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா துப்பாக்கிச் சூடு
கலிபோர்னியாவின் தலைநகர் சாக்ரமென்டோவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அமெரிக்க நேரப்படி அதிகாலை 2:00 மணியளவில் சாக்ரமென்டோவின் டவுன்டவுன் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புகள்
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர்களுக்குள் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதையடுத்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்ட சூழலில், அங்கு விரைந்து சென்ற போலீசார் நிலைமை கட்டுப்படுத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆகும்.

வீடியோ
இச்சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் மோசமாகக் காயமடைந்துள்ளதாக சேக்ரமெண்டோ மேயர் டாரெல் ஸ்டெய்ன்பெர்க் தெரிவித்தார்.

விசாரணை
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் சில திருடப்பட்ட கைத்துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இருந்து பெறப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளதாகவும் மேயர் டாரெல் ஸ்டெய்ன்பெர்க் தெரிவித்தார்.

அமெரிக்கா துப்பாக்கி கலாசாரம்
அமெரிக்காவில் பெரும்பாலான கொலை சம்பவங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாகவே நடைபெறுகிறது. அங்குத் துப்பாக்கிகளைப் பெறத் தேவையான கட்டுப்பாடுகள் குறைவு என்பதால் கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் 23 மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல 2021இல் 20 மில்லியனுக்கு மேல் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்பட்டது மட்டுமே. முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கிகளைச் சேர்த்தால் துப்பாக்கிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
-
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள்











Click it and Unblock the Notifications