இன்னையோட முடிஞ்சுது! ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்த முடிவு? மோசமான நாளாக இருக்கும்! அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரான் ராணுவ திறனை குறைப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளதாகவும், இன்று ஈரான் மீது மீண்டும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீடே ஹெக்சேத் கூறியுள்ளார். அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பெரிய அளவில் ஈரான் மீது தாக்குதல் நடத்த உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 11-வது நாளை எட்டியுள்ளது. ஈரானும் அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக வளைகுடாவில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதுவரை இல்லாத அளவு இருக்கும்
போர் நீடித்து வருவதால் சர்வதேச அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இந்த போரின் தாக்கம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதனால், ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் எப்போது முடிவுக்கு என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் இருநாடுகளும் மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வருவதால் நிலமை மோசமாகி கொண்டேதான் செல்கிறது.
இதற்கிடையே ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட்டர் ஹெக்சேத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- ஈரானுக்குள் இன்று நாம் நடத்தும் தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக இருக்கும்.
ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது
இன்றும் ஈரானுக்குள் நமது தாக்குதல்கள் மிகவும் தீவிரமான தாக்குதலாக இருக்கும். அதிகளவிலான போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் இடம் பெறும். உளவுத் தகவல் முன்னெப்போதையும் விட மிகவும் துல்லியமானது மற்றும் சிறந்தாக உள்ளது. ஈரான் மீதான போரில் அமெரிக்கா, முடிவெடுக்கும் விதத்தில் வெற்றி பெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்ணயித்த இலக்குகளை அடைந்து வருகிறது. ஈரான், கடந்த 24 மணி நேரத்தில் ஏவிய ஏவுகணைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்பதால், ஈரானின் ராணுவ திறனை, அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் பாதித்துள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications