ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கும் அமெரிக்கா? டிரம்பிற்கு போன USCIRF ரிப்போர்ட்.. ஏன் முக்கியம்?
வாஷிங்டன்: இந்தியாவில் மத சுதந்திரம் மோசமாகி வருவதாக அமெரிக்காவின் USCIRF என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பை அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரிக்கும் மத மோதல்கள் கவலை தருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
1998ல் அமெரிக்க நாடாளுமன்றம் மூலம் USCIRF உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு வெளிநாடுகளில் மத சுதந்திரத்தைக் கண்காணித்து அமெரிக்க அதிபர், வெளியுறவுச் செயலர், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும். அதன்படி இந்தாண்டிற்கான ரிப்போர்ட்டை USCIRF சமர்ப்பித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் தடை
USCIRF எனப்படும் இந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது. பாஜகவின் தாய் அமைப்பாகக் கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என USCIRF தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா அமைப்பு மீதும் தடை விதிக்க வேண்டும் என USCIRF பரிந்துரைத்துள்ளது. மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறியதற்காக அந்த அமைப்பின் மீதும் தடை விதிக்க வேண்டும் என USCIRF கூறியுள்ளது.
இந்தியாவை "குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு" எனப் பட்டியலிட்டுள்ள USCIRF, ஆயுத விற்பனை மற்றும் வர்த்தகக் கொள்கைகளை மத சுதந்திரத்துடன் இணைக்க அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது. தன் வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திர நிலை 'தொடர்ந்து மோசமடைந்து வருகிறது' எனக் கூறிய USCIRF, இந்தியாவில் மத சிறுபான்மையினர், வழிபாட்டுத் தலங்கள் இலக்கு வைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியது.
மத மாற்றத் தடை
அந்த ரிப்போர்ட்டில் மேலும், "மத மாற்றத்தைத் தடை செய்யும் வகையில் பல மாநிலங்கள் கடுமையான சிறைத் தண்டனைகளைக் கொண்டு வந்துள்ளன. குடிமக்களையும் மத அகதிகளையும் கைது செய்வதற்கும் சட்டவிரோதமாக வெளியேற்றுவதற்கும் வழிவகுத்தனர். மேலும், மத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கும்பல் தாக்குதல்களைத் தொடர்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வக்ஃபு திருத்தச் சட்டம் மற்றும் உத்தரகாண்ட் சிறுபான்மை கல்வி ஆணைய சட்டம் ஆகியவற்றை USCIRF விமர்சித்தது.
இந்தியாவுக்கு பிரஷர் போடணும்
மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநில வகுப்புவாத மோதல்களை USCIRF குறிப்பிட்டது. ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் வன்முறைக்குக் காரணம் எனவும் குற்றம் சாட்டியது. மத சுதந்திரப் பிரச்சனைகளில் இந்தியா மீது அழுத்தம் கொடுக்கவும் அமெரிக்க அரசுக்கு USCIRF பரிந்துரைத்தது. அதில் மேலும், "அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிற்கு ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த ரிப்போர்ட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிச்சயம் செயல்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. எனவே, தற்போதைய சூழலில் ஆர்எஸ்எஸ் மற்றும் ரா அமைப்பிற்கு அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புகள் ரொம்பவே குறைவு!
முதல்முறை இல்லை
USCIRF அமைப்பு இந்தியா குறித்து இதுபோல ரிப்போர்ட்டை சமர்ப்பிப்பது முதல்முறை இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் மச சுதந்திரம் மோசமடைந்து வருவதாக இந்த அமைப்பு தொடர்ந்து கூறி வருகிறது. இந்தாண்டிற்கான ரிப்போர்ட்டிற்கு இந்தியா இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. இருப்பினும், கடந்தாண்டு ரிப்போர்ட்டை இந்தியா நிராகரித்திருந்தது. அது பக்கச்சார்பானவை, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என குறிப்பிட்டது. ஜனநாயகத்தின் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இந்தியா இருக்கிறது என்றும் இந்தியாவின் நிலையை அச்சுறுத்தும் இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்














Click it and Unblock the Notifications