கனடாவில் பெரும் வெள்ளம்: ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிப்பு
Subscribe to Oneindia Tamil

கனடாவின் மேற்கு மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஷுஸ்வாப் ஏரிகளில் கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடானது. இந்த வெள்ளப்பெருக்கில் 130 பேரின் வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் அவர்கள் வீடுகள் இன்றி தவித்து வருகிறார்கள்.
மேலும் 2,200 பேரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையைச் சரிசெய்ய மீட்பு குழுவினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர்.
உள்நாட்டில் பாயும் வெள்ளநீர் தெற்குப் பக்கம் திருப்பிவிடப்பட்டுள்ளது. அது இந்த வார இறுதியில் பிரேசர் நதியை வந்தடையும். அதனால் அந்த நதிக்கரையில் 10 மீட்டர் உயரத்திற்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications