மதுரையில் களமிறக்கப்பட்ட அதிநவீன ANPR கேமராக்கள்.. போலீசாருடன் கைகோர்த்த தி சென்னை சில்க்ஸ்
மதுரை: மதுரை தீடீர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி இணைந்து முன்னெடுத்த சமூகப்பண்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சமூக விரோத செயல்களை தடுக்கும் மற்றும் கண்காணிக்கும் அதிநவீன ANPR மாடலில் 7 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் முக்கிய இடங்களான டவுன் ஹால் ரோடு சபரீஷ் அருகில், நேதாஜி ரோடு, க்ரைம் ப்ரான்ச், மதுரை கோர்ட் அருகில், தீடீர் நகர் போலீஸ் நிலையம் அருகில், பெரியார் பேருந்து நிலையம் பாலம் அருகில், பெரியார் கட்டபொம்மன் சிலை போன்ற இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இதனை முனைவர் திரு. J.லோகநாதன் IPS, காவல் ஆணையர்,
திரு.A.G இனிகோ திவ்யன், துணை ஆணையர்,
திருமதி.S.வனிதா, துணை ஆணையர் மற்றும் திரு. ஜெய் சங்கர் காவல் துறை ஆய்வாளர் மற்றும்
தி சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி நிர்வாகிகள் திறந்து வைத்து பொது பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications