ஸ்ரீராமநவமி பூஜை:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டப்பட்டு, மாக்கோலமிடப்பட்டு, ராமர்பட்டாபிஷே படத்திற்கு மாலையிட்டு பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும்.
ராமநவமியன்று ராமயணம் படிப்பது மிக விசேஷமானது. இது பல நன்மைகளையும்தரும். ராமாயணம் படிக்க இயலாதவர்கள். ஸ்ரீராம...ராம என்று சொன்னாலேராமாயணம் படித்து புண்ணியம் கிடைக்கும்.
ராமருக்கு நீர்மோர், பானகம், வடை போன்றவை நிவேதனம் செய்யப்படும்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை . தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பவற்றிற்குஇலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ஏக பத்தினி விரதனாக இருந்துஅவதாரப் புருஷனாக வாழந்து காட்டியர் ஸ்ரீராமர்.
ஸ்ரீராம நவமியான இன்று அவரை வணங்கி நலம் பல பெறுவோம்.
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனை நினைத்தால் யாது பயம். ராம்ராம்,.ராம்ராம், ராம்.. ராம்












Click it and Unblock the Notifications