Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலையில் கண் விழிக்கும் போது எதை பார்க்கலாம்? எதை பார்க்கக் கூடாது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலையில் எழுந்தவுடன் நாம் யாரை அல்லது எதைப் பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. ஆனால், ஒரு நல்ல விழிப்பு தரிசனம் நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களை நமக்கு தரும் என்கிறார்கள்.

இதுகுறித்து ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: காலையில் கண் விழிக்கும்போது, முதலில் நமது உள்ளங்கைகளை பார்ப்பது நல்லது.

spirituality positive

ஏனெனில், உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. உள்ளங்கைகளை பார்த்து மகாலட்சுமியை மனதார நினைத்து அன்றைய நாளை தொடங்கினால், அது ஒரு நல்ல விழிப்பு தரிசனமாக அமையும்.

உள்ளங்கைகளை தவிர, பூரண கும்பம், கோயில், கோயில் மணி, பசுமாடு கன்று குட்டி, இயற்கை காட்சிகள், மற்றும் நல்ல மலர்கள் போன்ற மங்களகரமான விஷயங்களையும் பார்க்கலாம். இதுமட்டுமின்றி, மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி போன்ற மங்களப் பொருட்களையும் காலையில் பார்ப்பது சிறந்தது.

இவை எல்லாவற்றையும் பார்க்க இயலாதவர்கள், வீட்டில் கடலின் படங்கள் இருந்தால் கூட பார்க்கலாம். ஒரு கணவன் மனைவியின் முகத்திலோ, மனைவி கணவனின் முகத்திலோ விழிக்கலாம். குழந்தைகள் பெற்றோரின் முகத்திலோ அல்லது பெற்றோர்கள் குழந்தைகளின் முகத்திலோ விழிப்பது அற்புதமான விழிப்பு தரிசனமாக இருக்கும்.

இப்படி நாம் அன்றாடம் காணும் விஷயங்கள் கூட ஒரு நல்ல நாளாக அமைய உதவும். இவ்வாறு தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் காலை கண் விழிக்கும்போது அபசகுணமான வார்த்தைகளைப் பேசுவதையோ, கேட்பதையோ, சண்டையிடுவதையோ தவிர்க்க வேண்டும். யாரையும் திட்டிக் கொண்டோ அல்லது வாக்குவாதம் செய்துகொண்டோ நாள் துவங்குவதைக் கைவிடவும்.

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் சுவாலைகளை கண் விழித்ததும் பார்க்க வேண்டாம். இவை எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். படுக்கையிலிருந்து அவசரமாகவும், பதற்றத்துடனும் எழுவதைத் தவிர்க்கவும்; இது மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்.

பழுதான கடிகாரத்தை பார்க்கக் கூடாது. இப்படி பார்த்தால் இது நேரமின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. அது போல் வீட்டில் உள்ள உடைந்த பொருட்கள், கண்ணாடி போன்றவற்றை காலையில் பார்க்கக் கூடாது.

தூங்கி எழுந்ததும் உங்கள் நிழலை பார்க்கக் கூடாது, இது பயத்தை உண்டாக்கும். காட்டு விலங்குகளின் படங்கள் அல்லது வன்முறையான காட்சிகளைப் பார்ப்பது எதிர்மறை உணர்வுகளைத் தரும் என்கிறார்கள். இதெல்லாம் சாஸ்திரங்கள் நம்புவதும் பின்பற்றுவதும் அவரவர் நம்பிக்கையை பொருத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+