முன்னோர்களுக்கு படைக்கும் உணவு.. அமாவாசைக்கு சமையலில் பயன்படுத்தக்கூடாத காய்கறிகள்? சேர்க்க கூடியவை?
சென்னை: தை அமாவாசை தினமான இன்று, முன்னோர்களுக்கு திதி தருவது அவசியமாகும்.. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து முன்னோர்களின் புகைப்படத்துக்கு வைத்து படைப்பார்கள். அந்தவகையில், அமாவாசையில் சமையலில் சேர்க்கப்படும் காய்கறிகள், தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன தெரியுமா?
நேற்று ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி வருகிறது.. அதுபோலவே, ஜனவரி 29ம் தேதி அன்று காலை 09.21 மணிக்கு துவங்கி, ஜனவரி 30ம் தேதி காலை 08.59 வரை பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும் உள்ளது.

இன்றைய தினம், நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்பார்கள். எனவே, வீட்டு வாசலில் முன்னோர்கள், எள்ளும், தண்ணீரும் பெறுவதற்காகவே காத்து கொண்டிருப்பார்களாம்.. எனவே, தர்ப்பணத்துக்காக கருப்பு எள்ளை மற்றவரிடம் கடனாக வாங்கக் கூடாது.
அந்தணர்கள்: இன்றைய தினம் எறும்பு, பசு, காகம், நாய், பூனை, அந்தணர்களுக்கு உணவளிக்கலாம்.. ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். முக்கியமாக, சாப்பாடு, கருப்பு உளுத்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, ஆடைகள் போன்றவற்றை தானம் தருவது, மிகச்சிறந்த புண்ணியமாக கருதப்படுகிறது.
இன்று சமையலில் வெங்காயம் பூண்டு சேர்த்துக் கொள்ளக் கூடாது. எப்போதுமே அமாவாசையன்று சமைத்த உணவுகளை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அதாவது, ரத்த சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும். பிற நபர்களுக்கு அமாவாசை தினத்தில் சமைத்த சாப்பாட்டை தரக்கூடாது என்பார்கள். ஆனால், அன்னதானம் செய்யலாம்.
சமையல் காய்கறிகள்: தை அமாவாசையில், முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து, அவைகள் அனைத்தையும் முன்னோர்களின் போட்டோக்களுக்கு முன்பு வைக்க வேண்டும்.. அந்த போட்டோக்களுக்கு பொட்டு வைத்து, பூ வைத்து, சமைத்து உணவுகளை படைக்க வேண்டும். பொதுவாக, அமாவாசையில் சமைக்கும்போது, சில காய்கறிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும், சிலவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்பார்கள்.
அந்தவகையில், நெல்லிக்காய், அவரக்காய், புடலங்காய், பயத்தங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், சக்கரவள்ளி, சேனை, சேப்பங்கிழங்கு, பிரண்டை, மாங்காய், இஞ்சி, மாங்கா இஞ்சி, பாரிக்காய் போன்றவற்றை அமாவாசையில் பயன்படுத்தி சமைக்கலாம். இதில் வாழைக்காய் மிக மிக முக்கியமானதாகும்.. வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுகிறது..
அகத்திக்கீரை: அதேபோல, அமாவாசைக்கு முட்டைகோஸ், நூக்கல், முள்ளங்கி, பீன்ஸ், உருளைகிழங்கு, காரட் தவிர்க்கலாம்.. இதில் கீரைகளில் அகத்திக்கீரை மட்டும் செய்யலாம். தர்ப்பணக் காலங்களில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications