இந்த 5 தப்பை தப்பித்தவறி செய்யாதீங்க.. வீட்டில் செய்ய வேண்டிய டாப் 5 விஷயம்.. மணி பிளான்ட் கவனியுங்க
சென்னை: தீபாவளி உட்பட எந்தவித பண்டிகைகளாக இருந்தாலும், அன்றைய தினங்களில் செய்யக்கூடாத சில செயல்களை முன்னோர்கள் விரிவாக எழுதி வைத்திருக்கிறார்கள்.. அதேபோல வீட்டிலுள்ள சில பொருட்கள் குறித்தும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனை சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே நாள், கிழமை என்றால், அன்றைய தினங்களில் மகாலட்சுமியின் வாசம் வீடு முழுவதும் பரவச்செய்ய வேண்டும். எனவே, வீட்டிலுள்ள சில பொருட்கள் வெளியே யாருக்கும் பரிசாக தரக்கூடாது.. அதேபோல, பிறரிடமிருந்து சில பொருட்களை வீட்டுக்குள் பரிசாக பெற்று வரக்கூடாது.

கருப்பு ஆடைகள்: அந்தவகையில், இதற்கு உலர்ந்த பழங்கள், இனிப்புகள், உடைகள், அழகான அலங்கார பொருட்கள், பானைகள், பாத்திரங்கள் போன்ற வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தாராளமாக பிறருக்கு பரிசாக வழங்கலாம்.
ஆனால், பண்டிகை நாட்களில் வாட்ச் பரிசாக தரவும் கூடாது, வாங்கவும் கூடாது.. சென்ட் போன்ற வாசனை திரவியத்தையும் பரிசாக தரக்கூடாது.. காரணம், இது வீட்டிற்குள் துரதிர்ஷ்டத்தை தந்துவிடுமாம்.
பரிசு பொருட்கள்: அதேபோல, கருப்பு ஆடைகளை பரிசாக தரக்கூடாது.. அப்படி தந்தால், குடும்பத்தில் மனஅமைதி குலைந்துவிடும். அதேபோல பிறருக்கு செருப்புகளையும், கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களையும் பரிசாக தரவும் கூடாது, வாங்கவும் கூடாது.
அதேபோல, நல்ல நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், வீட்டிலுள்ள சில பொருட்களையும் சுத்தம் செய்திருக்க வேண்டும்.. அந்தவகையில், மத புத்தகங்களை சரியாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். கடவுள்களின் சிலைகள், படங்களையும் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை உடைந்த சிலைகள் இருந்தால், அதை தீபாவளியன்று வெளியே தூக்கி போடக்கூடாது.
களிமண் விளக்குகள்: வீட்டில் பழைய வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் உள்ளிட்ட பாத்திரங்களையும், களிமண் விளக்குகளையும் சுத்தமாக வைக்க வேண்டும். இது நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள் கொண்டுவரும்.. நீர் தொடர்பான பொருட்கள், அதாவது நீரூற்றுகள், மீன் தொட்டிகள் போன்றவைகள் சுத்தமாக இருந்தால் செழிப்பை வீட்டிற்குள் கொண்டுவரும். தங்கம், வெள்ளி நகைகள், நாணயங்கள், பழைய நாணயங்கள், வரலாற்று பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
பச்சை செடிகள், துளசி, மணி பிளான்ட், கற்றாழை போன்றவை வீட்டிலிருந்து எறியக்கூடாது.அதேபோல உடைந்த கடிகாரத்தையும் வெளியே வீசக்கூடாது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications