மதுரையில் களைகட்டிய பெண்கள் தேர் இழுக்கும் மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்த் திருவிழா!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்த் திருவிழா இன்று அதிகாலையில் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பெண்கள் மட்டும் அம்மன் தேரை இழுக்கும் இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதேபோல மார்கழி மாதம் நடைபெறும் அஷ்டமி சப்பரத் தேர்த் திருவிழாவும் மிக முக்கியமான நிகழ்வாகும்.

மார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமியில் இந்த சப்பரத் திருவிழா நடைபெறும். இந்த தேர்தலில் சுவாமியும் அம்மனும் மதுரை மாநகரை வலம் வருவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அதிகாலையில் சுவாமி- அம்பாள் இருவரும் பிரியாவிடையுடன் புறப்பட்டு 4 வெளி வீதிகளில் வலம் வருவர். அப்போது மக்களுக்கு உணவளிக்கும் வகையில் சிவாச்சாரியார்கள் அரிசியை தூவி வருவர்.
இந்த அரிசியை பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்று வழிபாடு செய்வர். இந்த நிகழ்வின் போது பெண்கள்தான், அம்மன் சப்பரத்தை இழுப்பதும் சிறப்பு அம்சமாகும். இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications