கோழி முட்டை பரிகாரம்.. 2 முட்டைகள் இருந்தாலே போதும்.. "எதிர்மறை சக்திகள்" நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்
சென்னை: எதிர்மறை சக்திகளை உங்களிடமிருந்து விரட்ட வேண்டுமா? அப்படியானால் முன்னோர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்து கடைப்பிடித்த பரிகாரங்களுள் ஒன்று முட்டை பரிகாரம். இதை எப்படி செய்வது?
வாழ்க்கையில் தடங்கல்கள், தடைகள் போன்றவைகள் அதிகமாக இருந்தால், முன்னோக்கி நகர முடியாது.. அந்தவகையில், எதிர்மறை சக்திகளை விரட்டி, அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்க வேண்டுமானால், அதற்கு பரிகாரங்கள் உதவுகின்றன. இதில் ஒன்றுதான் முட்டை பரிகாரம்.
முட்டை பரிகாரம்: இந்த முட்டை பரிகாரங்களிலேயே வகைகள் உண்டு.. அமாவாசை நாட்களில், 1 முட்டையை எடுத்து உப்பு நீராலும், எலுமிச்சை சாறு கலந்த நீராலும் நன்றாக சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். பிறகு கண்களை மூடிக்கொண்டு, உங்கள் எதிர்மறை சக்திகள் எல்லாமே விலக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, தலையிலிருந்து காலை வரை, முட்டையால் ஒரு இடம் விடாமல் தடவ வேண்டும்.

எதிர்மறை சக்திகள்: முக்கியமாக கழுத்தின் பின்புறம், கை கால்களின் முட்டிகளின் பின்புறங்களில் எதிர்மறை சக்திகள் அதிகம் தங்கும் என்பதால் நன்றாக முட்டையால் தேய்க்க வேண்டும். இதனால் உடலிலுள்ள எதிர்மறை சக்திகள் எல்லாமே முட்டைக்குள் ஈர்க்கப்பட்டுவிடும். இப்படி உடம்பெல்லாம் முட்டையால் தேய்க்கும்போது, ஏதாவது ஓரிடத்தில் வலி இருந்தால் அந்த இடத்தை தடவ வேண்டும்.
பிறகு முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து பார்த்தால், கொப்பளம், குமிழ்கள், ரத்தம், கருப்பு புள்ளிகள் இப்படி ஏதாவது இருந்தால், எதிர் மறை சக்திகள் உங்களிடமிருந்து நீங்கிவிட்டது என்று அர்த்தம். இந்த முட்டையை கழிவறையில் கொட்டிவிடலாம்.
விலகிவிடும்: பிறகு நீர்நிறைந்த பாத்திரத்தில் இன்னொரு முட்டையை போட்டு, இரவில் நீங்கள் தூங்கும்போது தலைமாட்டில் 3 நாட்கள் வைத்துக்கொள்ள வேண்டும். 3 நாட்கள் தண்ணீரை மட்டும் மாற்றி கொள்ளலாம். 4வது நாள் சாக்கடையில் வீசிவிட வேண்டும். இதனால் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகள் முற்றிலும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல, வாரம் ஒருமுறை அதாவது ஞாயிறு மாலையில் செய்யக்கூடிய முட்டை பரிகாரமும் உள்ளது.. ஆனால், பூஜையறையில் இதனை செய்யக்கூடாது. ஒரே ஒரு முட்டையை உங்கள் வலது கையில் வைத்து, உங்கள் இரு புருவங்களுக்கு இடையே இந்த முட்டை உங்க உடலில் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.
"என்னை சூழ்ந்திருக்கும் கெட்ட சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், தீயவை அனைத்தும் என்னை விட்டு செல்கிறது" என்று மனதிற்குள் ஆழமாக பதியவிட்டு வேண்டி கொள்ள வேண்டும். இப்படியே, இதே முட்டையை உங்களுடைய தொண்டையிலும், பிறகு மார்பிலும் வைத்து இதே வார்த்தைகளை சொல்ல வேண்டும்.
வேப்பமரம்: பின்னர், ஏதாவது ஒரு மரத்தின் மீது எறிந்து உடைத்து விட வேண்டும்... ஆனால், வேப்பமரம், அசோக மரம், வில்வ மரம், போன்ற தெய்வீக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் மரங்களின் மீது வீசியெறிய கூடாது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications