திருக்கார்த்திகை தீபம்! ஐம்புலன்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?
சென்னை: திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் நிலையில் ஐம்புலன்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன தெரியுமா?
திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகளில் விளக்கு ஏற்றி தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. சிவப்பெருமானை ஜோடி வடிவில் தரிசக்க ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.

இந்த தீபத்தின் போது வீடுகளில் அகல்களில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். நல்லெண்ணெய், பசுநெய் அல்லது 5 எண்ணெயின் கலவையை கொண்டு விளக்கேற்றலாம். குறைந்தபட்சம் ஒரு விளக்காவது நெய்தீபம் ஏற்ற வேண்டும். வாசலில் ஏற்றப்பட்ட தீபம் 30 நிமிடங்களாவது எரிய வேண்டும். பிறகு கூட எடுத்துவிடலாம்.
தீபங்கள் தானாக குளிரும் வரை எரியவிடலாம். இதில் தவறில்லை. நேற்று முதல் 3 நாட்களுக்கு மக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிப்படுவார்கள். திருவண்ணாமலையில் விளக்கு ஏற்றிய பிறகு வீடுகளில் விளக்கேற்றும் பழக்கம் தொன்று தொட்டு உள்ளது.
பஞ்சபூதங்களின் தன்மைக்கேற்ப ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் (நிலம்) , திருவானைக்கால் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஐம்புலன்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் தொடர்புள்ளது.
பூமியை குறிக்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
நீரை குறிக்கும் திருவானைக்கால் ஜம்புகேஸ்வரர் கோயில்
நெருப்பை குறிக்கும் திருவண்ணாமலை திருக்கோயில்
காற்றை குறிக்கும் திருக்காளத்தீஸ்வரர் கோயில்
ஆகாயத்தை குறிக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில்
மனிதனின் உள்ளே ஐம்புலன்களும் வெளியே பஞ்சபூதங்களும் உள்ளன. அதன்படி
நிலம்- உடல்
நீர் - வாய்
காற்று - மூக்கு
ஆகாயம்- காது
நெருப்பு- கண்
அதாவது உடல் உள்பட்ட அனைத்துமே பஞ்சபூதங்களின் கலவையாகும் என்பதை உணர்த்துவதாகும். இந்த பஞ்சபூத ஸ்தலங்களில் 4 கோயில்கள் தமிழகத்திலும் ஒரு கோயில் ஆந்திராவிலும் உள்ளது. இந்த 5 ஸ்தலங்களிலும் நாயன்மார்களால் பாடப்பட்ட ஸ்தலங்களாகும்












Click it and Unblock the Notifications