இந்த 2 ராசிக்காரர்கள் காலில் சிகப்பு கயிறை கட்டவே கூடாது! 2 பேரில் நீங்கள் ஒருவரா பாருங்க!
சென்னை: எந்தெந்த ராசிக்காரர்கள் சிகப்பு கயிறை கட்டக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள், யாருக்கெல்லாம் இந்த நிற கயிறால் அதிர்ஷ்டக் காற்று வீசப்போகிறது என்பதையும் பார்க்கலாம்.
பொதுவாக எந்த கோயிலுக்குச் சென்றாலும் ஒரு நிற கயிறு விற்பார்கள். அதை வாங்கி கட்டிக் கொள்வார்கள். கோயிலில் வாங்கியதால் சுவாமி கயிறு என்பதால் அதன் மீது பக்தி, மரியாதை!

இந்த கயிறுகள் கட்டப்படுவது ஒரு விதமான எதிர்மறை ஆற்றலை நம்மை விட்டு போகச் செய்கிறது. அது போல் நேர்மறை எண்ணங்களை ஈர்த்து மனம் அமைதியடையவும் புத்துணர்ச்சி அடைகிறது. திருப்பதிக்குச் சென்றால் அங்கு கருப்பு நிற கயிறு விற்கப்படும்.
திருப்பதி லட்டுடன் அந்த கயிறையும் மக்கள் அக்கம்பக்கத்தினருக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். அது போல் ஒரு சில கோயில்களில் சிகப்பு கயிறு, பச்சை கயிறு, ஆரஞ்ச் நிற கயிறு என விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிகப்பு கயிறை எந்த ராசிக்காரர்கள் கட்டக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது சனி பகவானால் சில ராசிக்காரர்கள் சிகப்பு கயிறை கட்டினால் நன்மை கொடுக்காது. கும்பம், மீனம் உள்ளிட்ட ராசியினர் எப்போதும் சிகப்பு கயிறை கட்டவே கூடாது.
இப்படி கட்டினால் எதிர்பாராத பாதகங்களை கொடுக்கும். இந்த ராசியினர் இளஞ்சிகப்பு, மஞ்சள், கருப்பு நிற கயிறுகளை அணியலாம். மேலும் மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசியினர் சிகப்பு நிற கயிறு பெரும்பாலும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
சனி பகவான் முதலில் ஒருவரது காலைத்தான் பிடிப்பார் என்பார்கள். இதனால்தான் கால்களை கழுவும் போது கால்களின் குதிகளையும் கழுவ வேண்டும் என்பார்கள். கருப்பு கயிறு கட்டினால் ராகு கேது தோஷம் நீங்கும் என்கிறார்கள்.
கருப்பு கயிறு கட்டும் போது அதில் 9 முடிச்சுகள் இருக்க வேண்டும். கயிற்றை பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் அணிய வேண்டும். சிலருக்கு கருப்பு ஆகாவிட்டால் சிகப்பு கயிறை கட்டலாம். கருப்பு, சிகப்பு கயிறுகளில் தற்போது டிசைன்களாக மணிகள் பொருத்தப்பட்டு வந்துவிட்டன. எந்த கயிறாக இருந்தாலும் அவரவர் நம்பிக்கையை பொருத்தது.












Click it and Unblock the Notifications