புதிய கட்டடங்களுக்கு பச்சை நிற வலை போடுவது ஏன் தெரியுமா?
சென்னை: புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் பச்சை நிற வலை போர்த்துவது எதற்காக என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் பல்வேறு தகவல்களை பார்ப்போமா? இதே போல் மாடித் தோட்டங்களிலும் இது போல் வலை போடப்பட்டிருக்கும்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் கூறியிருப்பதாவது: புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் பச்சை நிற வலை போர்த்துவது எதற்காக?.

முக்கியமாக இது அந்தக் கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்கள் வெளியில் நடப்பதைக் கவனிக்க நேர்ந்தால் கவனக்குறைவாக கீழே விழ நேரிடலாம். விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.
அதிகமான சூரிய வெளிச்சம் கட்டிடத்தினுள் விழுவது அங்கு பணிபுரிபவர்களை விரைவில் சோர்வடையச் செய்யும். இதனைத் தவிரக்கும் விதமாகவும் இவ்வித மறைப்பு ஏற்படுத்தப்படுகிறது .
மேலும் வெளியில் நடப்பதை கட்டிட வேலையாட்கள் கவனிக்க நேர்ந்தால் அவர்கள் வேலையில் குறைபாடு மற்றும் வேலையில் தாமதம் ஆகியனவும் நேரிடும்!
அடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கை இது. கட்டிடத்திலிருத்து வெளியேறும் தூசி போன்றவற்றிலிருந்து பக்கத்து கட்டிடத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இவ்விதம் வலை அமைப்பு கட்டிடத்தைச் சுற்றிலும் அமைக்கப்படுகிறது.
கட்டிடத்திலிருந்து வெளியே விழ நேரும் சிறு சிறு கற்கள் போன்றவற்றால் தெருவில் நடந்து போகின்றவர்களைக் காக்கும் நடவடிக்கையும் இது.
கட்டிடத்தின் வெளிப்பூச்சு சமயம் சிமென்ட் கலவை அடுத்த கட்டிடத்தின் மீது விழுவதைத் தடுப்பதற்காகவும் பெயிண்ட் அடிக்கும்போது பக்கத்து கட்டிடத்தின்மீது சிதறாமல் தடுக்கவும் இது பயன்படுகிறது. இவைகள் வலையினுள்ளேயே தங்கிவிடும்.
கட்டிடம் முடியும் வரை மற்றவர்களின் கண்ணேறு (திருஷ்டி) கட்டிடத்தின் மீது படுவதைத் தடுப்பதற்காகவும் இவ்விதம் கட்டிடத்தைச் சுற்றிலும் பச்சை நிற வலையமைப்பு ஏற்படுத்துகின்றனர்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications