வாடகை வீட்டுதாரர்கள் அறிய வேண்டியது! குடிபோனால் இந்த 3 பழைய பொருளையும் கொண்டு போகாதீங்க! வறுமை வரும்
சென்னை: வாடகை வீட்டுதாரர்கள் பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு குடிபோக நேரும்போது, சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பழைய வீட்டிலுள்ள பொருட்களை, புதிய வீட்டில் பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழும்.. இதுகுறித்தும் முன்னோர்கள் பல்வேறு விஷயங்களை சொல்லி வைத்துள்ளனர்.
பழைய வீட்டிலிருந்து புதிய வீடு மாற நேரும்போது, சிலருக்கு வளமான எதிர்காலம் அமையலாம், மேலும் சிலருக்கு நிலைமையே முற்றிலும் மாறிவிடும்.. எனவே, வாஸ்து அமைப்புகளில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. கிழக்கு அல்லது வடக்கு திசையில் அலமாரிகளில் கனமான பொருட்களை வைக்க வேண்டாம்

பழைய வீட்டிலுள்ள பொருட்களை எடுப்பதற்கு முன்பு, எலுமிச்சம் பழத்தை வலது கையில் வைத்து, பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். குடிபோகும் புதிய வீட்டில், இங்கு நீடித்து வந்த ஆரோக்கியம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி அத்தனையும் நீடிக்க வேண்டும் என்றும், இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும், குல தெய்வமும், காவல் தெய்வமும், இஷ்ட தெய்வமும் புது வீட்டிற்கும் வந்து பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
எலுமிச்சை தரும் பாதுகாப்பு
பிறகு, அந்த எலுமிச்சையை மஞ்சள் துணியில் முடிச்சு கட்டி தனியாக வைத்து கொள்ள வேண்டும். புதிய வீட்டில் பொருட்களை அடுக்கி வைத்து, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றியதுமே, அந்த எலுமிச்சம் பழத்தை பூஜையறையின் அலமாரியில் வைத்து வேண்டி கொள்ளலாம். இதனால், அங்குள்ள காவல் தெய்வங்கள், இந்த வீட்டிலும் உங்களை காக்கும்.
குறிப்பாக, உபயோகப்படுத்தும் பொருட்களை முறையாக பயன்படுத்தினாலே, பாதி பிரச்சனைகளை தவிர்க்கலாம். அந்தவகையில், பழைய வீட்டை காலி செய்யும்போதே, தேவையில்லாத பொருட்கள், உபயோகமில்லாத, உடைந்த பொருட்களை நீக்கிவிட வேண்டும்.
3 முக்கிய பொருட்கள்
அந்தவகையில் 3 முக்கிய பொருட்களை, புதிய வீட்டிற்கு கொண்டு செல்லாமல் தவிர்க்க வேண்டும்.. முதலாவதாக, பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகளை சேர்த்து வைக்கக்கூடாது. சிலர் சேமித்து வைத்து எடைக்கு போடுவார்கள் என்றாலும், அதை உடனே செய்ய வேண்டும். நீண்ட நேரம் பழைய குப்பைகள் வீட்டில் இருப்பது எதிர்மறை சக்தியை பரப்பக்கூடும். இதில் பழைய காலண்டர்களையும் சேர்த்து கொள்ளலாம். இதனையும் சரியான முறையில் நீக்க வேண்டும்.
துடைப்பங்கள், மாப்கள்
உடைந்த பொருட்கள், நெளிந்த பொருட்களை, உபயோகமில்லாதவைகளை பயன்படுத்தினால், அன்னபூர்ணா தேவி அத்தகைய வீட்டிற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்குவதில்லை.. இது உங்கள் வீட்டில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மற்ற அறைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறீர்களோ, அதே அளவுக்கு ஸ்டோர்ரூமையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்... அதேபோல பழைய துடைப்பங்கள, மாப்ஸ் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.. முடிந்தவரை பழைய வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக புதிதாக வாங்கி பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications