நாளை விநாயகர் சதுர்த்தி! முழு முதற் கடவுளான பிள்ளையாருக்கு பூஜை செய்ய உகந்த நேரம் எது?
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் நிலையில் பூஜை செய்ய நல்ல நேரம் எப்போது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஆவணி மாதத்தில் பூஜை செய்யப்படும். இதற்காக விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்வார்கள்.

விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை வைத்து மக்கள் வழிபடுவார்கள். மேலும் தெருக்களில் ஆங்காங்கே பெரிய பெரிய விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இவை எல்லாம் குறிப்பிட்ட நாட்கள் கழித்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்படும்.
விநாயகர் பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நாளை முதலில் அதிகாலையிலேயே எழுந்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு வீட்டு வாசலிலும் சாமி இருக்கும் அறையிலும் மாக்கோலமிட வேண்டும். பின்னர் குளித்துவிட்டு பூஜை அறையில் மணையை வைத்து அதன் மேல் தலை வாழையிலையை வைக்க வேண்டும்.
அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு அதன் கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து தேவையான பூஜைப் பொருட்கள், அபிஷேக பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வரச் செய்து அதற்கு சந்தனம், குங்குமமிட்டு தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு இடுப்பில் துண்டு கட்டி பூமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம் மாலை அணிவித்து குன்றிமணியால் விநாயகரின் கண்களை திறக்க வேண்டும்.
பின்னர் பிள்ளையார் குடை வைத்து விளக்குகளை ஏற்றி பூஜையை தொடங்கலாம். கொழுக்கட்டை, சுண்டல், எள் உருண்டை உள்ளிட்டவைகளை வைத்து படைக்கலாம். விநாயகர் துதியை சொல்லி பூஜை செய்யலாம். விநாயகர் சிலையை அன்றைய தினமோ அல்லது ஒற்றை படையில் 3, 5, 7 ஆவது நாளோ விஜர்சனம் செய்ய வேண்டும்.
விநாயகர் வீட்டில் இருக்கும் வரை இரு வேளையும் பூஜை, நைவேத்தியம் செய்ய வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் கிட்டும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications