Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஷ்ட லட்சுமி குடியிருக்கும் தலைவாசல்..மறந்தும் கூட தலை வைத்து படுக்காதீர்கள்..செய்யக்கூடாத தவறுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டின் பிரதான வாசலான நிலை வாசலில் அஷ்ட லட்சுமிகளும் குடியிருப்பதாக ஐதீகம். தலைவாசல் படி வழியாகத்ததான் அன்னை மகாலட்சுமி நமது வீட்டிற்குள் குடியேறுவதாக ஐதீகம். நாம் நம்முடைய தலைவாசல் படியின் அருகில் அமர்ந்து சில விசயங்களை செய்யக்கூடாது. நாம் செய்யும் தவறுகளே நமது வீட்டில் செல்வம் குறைந்து வறுமை ஏற்பட காரணமாகி விடும்.

தலைவாசல் என்பது ராஜவாசல். அந்த வாசலில் நாம் சில காரியங்களை செய்ய வேண்டும். தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். முன்பெல்லாம் நம் வீட்டுத் தலைவாசல் என்பது வீட்டிற்கு உள்ளே செல்பவர்கள் தலை குனிந்து செல்லும் அளவிற்கு தாழ்வாக தான் அமைந்திருக்கும்.

House Thalaivasal tips: Even if you forget, do not sleep with your head - Dos and Dont these things

நம் வீட்டு வாசற்படியில் மகாலட்சுமியும், அஷ்டலக்ஷ்மியும் குடி கொண்டிருப்பதாலும், கும்ப தேவதைகள் வாசலில் இரண்டு பக்கமும் அமர்ந்திருப்பதாலும், அவர்களை நாம் வணங்கும் வகையில், தலையை குனிந்து செல்வதற்காகவே அப்படிப்பட்ட அமைப்பு அந்த காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி நாம் குனிந்து செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும்.

இன்றைக்கு தலைவாசற்படி என்பது தரையோடு டைல்ஸ் பதிக்கப்பட்டிருப்பதால் மிதிக்காமல் செல்ல முடியாது. அதே நேரத்தில் நிலை வாசற்படியை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். நிலையின் இரண்டு பக்கமும் ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்து மஞ்சள் தேய்த்து பொட்டு வைக்க வேண்டும்.

நம் வீட்டு வாசல் படியின் முன்னால் ஒரு உருளியில் தண்ணீர் ஊற்றி அதில் மலர்களை நிரப்பி வைப்பது நல்லது. இதன் மூலம் நம் வீட்டிற்குள் நல்ல சக்தி ஈர்க்கப்படும். தண்ணீரையும் பூக்களையும் நாம் மாற்ற வேண்டும்.

செல்வம் பெருக தங்க காசுகளை பொழியும் மகாலட்சுமியின் புகைப்படத்தை நம் வீட்டு வாசலில் மாட்டி வைப்பது சிறந்தது. வீட்டிற்குள் பார்த்தது போல மகாலட்சுமியின் புகைப்படத்தை மாட்டி வைக்கலாம். ஸ்வஸ்திக் அடையாளம் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை தேடித்தரும். அதே போல கும்ப கலசத்தையும் வீட்டின் நிலைவாசலின் இரு பக்கமும் மாட்டி வைக்கலாம்.

மாலைகள், தோரணங்கள் கட்டுவதற்காக அடிக்கப்படும் அணியானது, வாசற்படியின் மேல் அடிக்காமல் அதில் இருந்து தள்ளி சுவற்றில் அடிப்பது நல்லது.
நிலை வாசல்படியின் முன்பு மாவிலைத் தோரணம் விசேஷ நாட்களில் மட்டும் தான் கட்ட வேண்டும் என்பதில்லை. வெள்ளிக்கிழமை நாட்களில் கூட 11 மாவிலைகளை நம் வீட்டு வாசலில் தோரணமாக தொங்கவிடுவது நல்லது. அது நல்ல சக்திகளை வீட்டிற்கு ஈற்று கெட்ட சக்தியை விரட்டியடிக்கும்.

நம் வீட்டு வாசல் கதவில் குலதெய்வம் குடியிருக்கும் என்பதும் ஒரு ஐதிகம். இதனால் சத்தம் போடாமல் கதவினை திறப்பதும் கதவினை அடைப்பதும் நல்லது. கிரகலஷ்மி வாசற்படியில் வாசம் செய்கின்றாள் என்பதனால் அதில் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது. நில வாசற்படியில் நின்று கொண்டு தும்மல் போடக்கூடாது. நிலை வாசலில் தலை வைத்து படுக்க கூடாது. வாசற்படியின் முன்பாக தலையை விரித்து போட்டுக்கொண்டு அமரக்கூடாது.

வாசற்படியின் மேல் அமர்வது, வாசலில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை பற்றிய குற்றம் குறைகளை பேசக்கூடாது. நகத்தை கடித்து துப்பக்கூடாது. இந்த தவறுகளை தெரியாமல் செய்தால் கூட கெட்ட சக்திகளை நாமே நம்முடைய வீட்டிற்குள் அழைப்பதற்கு சமமாகும்.

நிலை வாசலின் கதவு வீற்டிற்கு உள்புறம் திறக்கும் படி வைக்க வேண்டும். வெளிப்புறமாக கதவு திறக்கும் படி வைக்க கூடாது. வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் நிலை வாசற்படியின் அருகே குபேர விளக்கினை ஏற்றி வைப்பது நல்லது. இதன் மூலம் குபேர யோகம் ஏற்பட்டு வீட்டில் செல்வ வளம் பெருகும். இது குடும்பத்தை நல்ல சுபிட்சமாக வைத்திருக்க நாம் செய்யும் முதல் காரியமாகும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+