கார்த்திகை பௌர்ணமி.. கவலையை போக்கும் கந்தனின் கிருத்திகை விரதம்.. சிறப்பு மிகுந்த கார்த்திகை மாதம்
சென்னை: மற்ற எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு என்பார்கள்.. இதற்கு காரணம் என்ன தெரியுமா? கிருத்திகை விரதம் எப்போது துவங்க வேண்டும்? யார் யாரெலலாம் கிருத்திகை விரதம் மேற்கொள்ளலாம்? சுருக்கமாக பார்ப்போம்.
நேற்றைய தினம் அதாவது நவம்பர் 16ம் தேதி கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.. இந்த மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதமாகும்.. கந்தனுக்கு முதலில் உருவான திருநாமம் கார்த்திகேயன் என்பதாகும்.. ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதாலேயே கார்த்திகேயன் என்ற பெயர் வந்தது.
சிவபெருமான்: முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக, சிவபெருமானால் உருவாக்கப்பட்ட விரதம் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதமாகும்.. எனவே, இந்த மாதத்தில் முருகனுக்கு விரதமிருப்பது மிகப்பெரிய பலனை பெற்றுத்தரும்..

கார்த்திகை நாட்களில் முருகப் பெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத்துணையும், புத்திசாலியான புத்திரர்களும் கிடைப்பார்கள்.. வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைப்பதுடன், எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.
கார்த்திகை முதல் நாளில் முருகன் சன்னதியில் 3 அகல்விளக்கு ஏற்றி, 9 முறை சுற்றி வந்து முருகனை பிராத்தனை செய்து வரும்போது, வேலை வாய்ப்புகள் அமையும் என்கிறார்கள்..
விளக்குகள்: அதேபோல, முருகன் சன்னதியில் 3 விளக்கேற்றி, 6 முறை சுற்றி வந்து பிராத்தனை செய்து வந்தால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு பலன் கிடைக்கும். 5 விளக்கு ஏற்றி கோவிலை 9 முறை ஆண்களும், 1 விளக்கு ஏற்றி திருமண யோகம் என்ற பிரார்த்தனை செய்து, 9 முறை பெண்களும் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால், திருமணம் கைகூடும் என்பார்கள்.
கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும்போது பௌர்ணமி ஏற்படும்.. கார்த்திகை மாதம் முழுவதுமே விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலமாகும். இந்த நாளில்தான் கார்த்திகை பௌர்ணமி வருகிறது.. மேலும், கார்த்திகை பௌர்ணமி நாளில் கார்த்திகை தீபத்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், வரும் டிசம்பர் 13 அன்று கார்த்திகை பௌர்ணமி வருகிறது.
விரத வழிபாடு: கார்த்திகை துவங்கும் நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். இந்த கார்த்திகை பெளர்ணமி நாளில் சந்தன அபிஷேகம் செய்து முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.. அதுமட்டுமல்ல, வெண்கலம், வெள்ளி விளக்கில் நெய்யிட்டு, தீப ஒளியுடன் கோயிலுக்கு தானமாக வழங்கினால், இதுநாள் வரை பட்ட கஷ்டங்களும், தடைகளும் விலகுமாம்.
கார்த்திகை பௌர்ணமி நாளில் விரதமிருப்பது, பல்வேறு பலன்களை பெற்றுத்தரும்.. கந்த சஷ்டி 6 நாள்களும் விரதமிருக்க முடியாமல் போனவர்கள்கூட, இந்த கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் விரதமிருந்தால், அதே பலன்களை பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
கார்த்திகை தீபம்: கார்த்திகை பவுர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.. அதேபோல, கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்றுவது கூடுதல் சிறப்பை தருமாம்.. அப்படி தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.
கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வைக்கும் வழக்கம் நம்முடைய மரபில் உள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் வரும் துவாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் கங்கை கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்குமாம்.. அதேபோல, நெல்லி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்றும், விளக்கு , பழங்கள், தானியங்கள் ,வெண்கல பாத்திரங்கள் தானம் செய்தால் செல்வம் பெருகும் என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications