சமையலறையில் இந்த பொருள் கீழே விழவே கூடாது.. கிச்சனில் இதை உடனே வெளியே போட்டுடுங்க! பணம் தரும் வாஸ்து
சென்னை: ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் லக்ஷ்மி கடாட்சத்துடன் சுபீட்சமாக இருக்க வேண்டுமானால், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், கடன், வறுமையின்றி செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமானால், அந்த வீட்டின் அமைப்பானது சரியாக இருக்க வேண்டும்...அதிலும், வீட்டின் சமையலறையில் சில பொருட்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. அதேபோல, சில பொருட்கள் கீழே விழுவது அபசகுணம் என்பார்கள்.. அந்தவகையில், ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.
வீட்டில் எப்போதுமே குங்குமம் கைத்தவறி கீழே சிந்துவது அபசகுணம் என்பார்கள்.. ஆனால் அது தவறு.. குங்குமம் தவறி கீழே கொட்டிவிட்டால், வெற்றி மற்றும் அனுகூலம் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தமாம்.

தேங்காய், மஞ்சள், குங்குமம்
அதேபோல, தேங்காய் கைத்தவறி கீழே விழுவதும் நன்மைக்கே.. நீங்கள் செய்யப்போகும் காரியங்கள், தொழில் அனைத்திலுள்ள தடை நீங்கும்.. பண வரவும் அதிகமாகும் என்று அர்த்தம்.. வாசனையுள்ள பூக்கள் கைத்தவறி கீழே கொட்டினாலும், காரிய வெற்றி என்று பொருளாகும்..
ஆனால் சமைலறையில் சில பொருட்கள் கீழே விழுவது நன்மை தரும் என்பார்கள்.. சல பொருட்கள் கீழே விழவே கூடாது என்பார்கள்..
உதாரணத்துக்கு சர்க்கரை கீழே கொட்டி விட்டால் அது நன்மைக்குதானாம்.. புகழும், வளமும், தொழிலில் மேன்மையும் ஏற்படுமாம்.. அதேபோல, மங்களகரமான மஞ்சள் கீழே கொட்டினால் மங்கலம், சிறப்பு என்று பொருள். ஏதேனும் தொழில் தொடங்கப்போகிறீர்கள் என்றால், அது சிறப்பாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
கைதவறி கொட்டும் பால்
ஆனால், அரிசி கைத்தவறி கீழே கொட்டி விட்டால், குடும்ப சச்சரவு, காரியத்தடை என்று அர்த்தம்... புதிதாக தொழில் தொடங்கினாலும், தடையும், குழப்பமும் ஏற்படுமாம்..
சமையல் எண்ணெய் கைத்தவறி கீழே கொட்டிவிட்டால், அவசெய்தி, இழப்பு வரப்போகிறது என்று அர்த்தம்.. தொழில் செய்பவர்களுக்கு கடன், பொருளாதார நெருக்கடி வருமாம்..
பால் காய்ச்ச எடுக்கும்போது கைத்தவறி பால் கொட்டிவிட்டுட்டாலோ, அல்லது பூனை பாலை தட்டி விட்டுடாலோ அது குடும்பத்துக்கு நல்லதல்ல.. கல் உப்பு மகாலக்ஷ்மியின் அம்சமாக சொல்லப்படுவதால், அதனை சிறிதும்கூட தவறி கீழே சிந்தக்கூடாது.. இதனால் பொருளாதார இழப்பு, பண விரயம் ஏற்படுமாம்.
சமையல் பாத்திரங்கள் நழுவி தவறி விழுவதும், பாத்திரங்கள் உடைவதும் நல்லதல்ல.. இதனால் குடும்பத்தில் தீரா பிரச்சனை வருமாம்.. உறவுகளிடம் பகையும் வளருமாம்.
தண்ணீர் - வாயு மூலை
அதுமட்டுமல்ல, வீட்டின் குலதெய்வமும், பித்ருக்களும் தண்ணீரில் இருப்பதாக நம்பப்படுவதால், வாயு மூலையில் தண்ணீர் பானை, அல்லது சிறிய அரிசி மூட்டை வைத்திருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் காலியாக போட்டு வைக்கக்கூடாது.
கிச்சனில் அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள், ஏலக்காய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. எக்காரணம் கொண்ம், இரும்பினால் செய்யப்பட்ட அஞ்சறை பெட்டியில், நாணயங்களை சேகரிக்க கூடாது. அதாவது இரும்புடன் இரும்பை சேர்க்கக்கூடாது. எப்போது சமையலறையில் மண்சட்டியை மறைத்து வைத்து, அதில் பணத்தை சேகரிபப்து பொருளாதாரத்தை உயர்த்தும்.
வெளியே எடுத்துருங்க
அதேபோல, சில பொருட்கள் சமையலறையில் இருப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.. முக்கியமாக மருந்து பொருட்களை வைக்கக்கூடாது.
பாத்திரங்களை கழுவாமல் அப்படியே சிங்கில் போட்டு வைத்திருக்க கூடாது. இது குடும்ப வறுமையை அதிகப்படுத்திவிடும்... மேலும், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், உடைந்த பாத்திரங்களையும், நெளிந்த, விரிசலடைந்த பாத்திரங்களையும் சமையலறையில் வைத்திருக்கக்கூடாது.. அழுகிய துர்நாற்றம் வீசும் பொருட்களையும் கிச்சனில் வைத்திருக்க கூடாது என்பார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications