நேரங்காலம் பார்க்காம கடன் வாங்காதீங்க..வகையா சிக்குவீங்க..கடன் தீர ஆன்மீகம் சொல்லும் ஈஸி டிப்ஸ்
சென்னை: கடன் கொடுப்பவர்கள் கூப்பிட்டு கூப்பிட்டு கொடுப்பார்கள். வங்கி லோன் மட்டுமல்லாது இப்போது கடன் கொடுக்கும் செயலிகளும் அதிகரித்து விட்டது. ஆப் மூலம் கடன் வாங்கி வாழ்க்கைக்கே ஆப்பு வைத்துக்கொண்டவர்கள் இருக்கின்றனர். பிசினஸ்காக கடன் வாங்கியது போய் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு கூட கடன் வாங்கி சூதாடி தோத்தவர்கள் அதிகம். ஏன் எதற்காக கடன் வாங்குகிறோம் என்று யோசித்து வாங்க வேண்டும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்கள் என்ன பரிகாரம் செய்தால் தப்பிக்கலாம் என்று ஆன்மீகத்தில் பரிகாரம் கூறப்பட்டுள்ளது.
கடன் வாங்கும் போதும் சரி கடன் கொடுக்கும் போதும் சரி நேரம் காலம் பார்த்து வாங்க வேண்டும் கொடுக்க வேண்டும். பணமோ, பொருளோ சரியான நேரம் பார்த்து கடன் வாங்கினால்தான் அதை எளிதில் திருப்பி தர முடியும். தவறான நேரத்தில் கடன் வாங்கினால் அதை திருப்தி தர முடியாமல் கடனில் இருந்து மீள முடியாமல் போய் விடும்.

ஒரு சிலர் பணம் வரும் முன்பே அதற்கான செலவை தயாராக வைத்திருப்பார்கள். வேறு வழியில் பணம் வரும் என்று நினைத்து கடன் வாங்கி விடுவார்கள். அந்த பணம் வராமல் போனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமர் போய் விடும். அவசர தேவைக்காக கடன் வாங்குவது தவறில்லை. ஆடம்பர தேவைக்காக அநாவசிய தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. ஹஸ்தம் நட்சத்திரம் நாளில் கடன் வாங்கவே கூடாது. அப்படி கடன் வாங்கினால் அந்த கடனை திருப்பி தர முடியாமல் போய் விடுமாம். கடன் மேலும் மேலும் பெருகுமாம்.
கடனை திருப்பி தர வேண்டும் என்று நினைப்பவர்கள் குளிகை நேரத்தில் கடன் கொடுக்கலாம். செவ்வாய்கிழமை பிரதோஷ நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு 90 நிமிடத்திற்கு முன்பாக கடனை திருப்பி தர வேண்டும். செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் கடனை திருப்பி தரலாம் கடன்கள் படிப்படியாக அடைபடும்.
கடனை அடைக்க முடியவில்லையே என்று சிரமப்படுபவர்கள் எளிமையான பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை உங்களுக்கு தோதான நாள் பார்த்து செய்ய வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். சிறிய மண்பானை குடுவையை வாங்கி அதில் நீங்கள் கடன் வாங்கியவரின் பெயரை எழுதி கடன் தொகையை எழுதி போட வேண்டும். சிவப்பு துணியில் 10 கருப்பு மிளகு, ஒரு கொட்டைப்பாக்கு மற்றும் சில 1 ரூபாய் நாணயங்களை சேர்த்து கட்டி அந்த மண் பானைக்குள் போட வேண்டும். உங்கள் கை தவிர யாருடைய கையும் மண் பானையில் படக்கூடாது.
பூஜை செய்யும் போது மண் பானைக்கும் தீபாராதனை காட்டி கடன் தீர பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன்கள் தீர வழி பிறக்கும் பண வருமானமும் வரும். கடன் பிரச்சினை தீர்ந்த உடன் சிவப்பு துணியை அவிழ்த்து அதில் உள்ள சில்லறை காசுகளை அருகில் உள்ள கோவிலில் போட்டு விடுங்கள். கடன் எழுதி வைத்த காகிதம், மண்பானை, கொட்டைப்பாக்கை ஓடும் நீர், கிணறு அல்லது குளத்தில் போட்டு விடுங்கள். முழு நம்பிக்கையுடன் நீங்கள் செய்யும் பரிகாரம் கடன் தீர வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.












Click it and Unblock the Notifications