புல்லரிக்குது.. சுசீந்திரம் பகவதி அம்மனின் வைர மூக்குத்தி! கன்னியாகுமரியில் கன்னிகா பூஜையின் அதிசயம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியின் பகவதி அம்மன் கோயிலின் சிறப்புகள் என்ன தெரியுமா? திருமண தடையிருப்பவர்கள் இங்கு ஏன் செல்ல வேண்டும் தெரியுமா?
கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கன்னிப்பெண் தெய்வமாக சீந்திரம் எனும் ஊரில் காட்சி அளிக்கிறார். கன்னியாகுமரியின் ஒளிமிக்க அன்னையாக கருதப்படுகிறார் பகவதி அம்மன்..

இந்த அம்மனின் வைரமூக்குத்தி, யோகசக்தியின் வெளிப்பாடு உள்ளது.. கண்ணை பறிக்கும் வைர மூக்குத்தியுடன், ஒரு கையில் இலுப்பைப்பூ மாலையை தரித்து, இன்னொரு கரத்தைத் துடைமீது அமர்த்தி தவக்கோலத்திலே காட்சியளிக்கிறார் பகவதி தாய்.
சுயம்வரம்: கன்னியாகுமரி பகவதி அம்மனை கன்னிகா பூஜை அல்லது சுயம்வர பூஜை செய்து மனம் உருக வழிபட்டால் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் விலகி உடனே திருமணம் கை கூடிவிடும் என்பார்கள்.. அதுமட்டுமல்ல, காசிக்கு செல்பவர்கள் இங்கு வந்து சென்றால் கூடுதல் பலன்களை பெற முடியுமாம்.
திருமணம் ஆகாத பெண்கள், விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே, இந்த கோவிலில் சுயம்வர அர்ச்சனை நடத்தப்படுகிறது... இதற்காக கோவில் அலுவலகத்தில் பணம் செலுத்தி விட்டு இந்த சுயம்வர அர்ச்சனையை தொடங்க வேண்டும். தொடர்ந்து 11 வாரங்கள் கோவிலுக்கு சென்று பகவதி அம்மனுக்கு இந்த அர்ச்சனை செய்து வந்தால் திருமணம் விரைவில் கைகூடும்.
பெண்கள்: ஒருவேளை பெண்களுக்கு தோஷம் இருந்தாலும், இந்த கோயிலில் கன்னிகா போஜனம் என்ற பூஜை நடத்தப்படும்... கோவிலின் தெற்கு பக்கமுள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூஜையை நடத்துவார்கள்.
பூஜையில் பங்கேற்கும் சிறுமிகளுக்கு, தோஷம் நீங்குவதற்காக பூஜை நடத்தி, பாவாடை, தாவணி, பூ, வளையல், வெற்றிலை, பாக்குடன், தட்சணையும் சேர்த்து தருவார்கள்.
அம்மன்: மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்பதால், அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை மூலம் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட ஏராளமான பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications