குழலூதும் கண்ணன்.. மயிலறகு சூடிய மன்னன்.. உங்கள் வீட்டில் இதை வைத்திருந்தால் கிருஷ்ணன் ஓடி வருவான்!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கண்ணனுக்கு பிடித்தமான பொருட்களை வீட்டிற்குள் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டமும் செல்வ செழிப்பும் உண்டாகும். கண்ணனின் கைகளில் எப்போதும் புல்லாங்குழல் இருக்கும்.. தலையில் மயிலிறகு சூடியிருப்பார். கிருஷ்ணன் சங்கு சக்கரம் ஏந்தியிருப்பார். கண்ணனின் பிறந்தநாளில் கண்ணனுக்குப் பிடித்தமான பொருட்களை நம்முடைய வீட்டில் நாம் வாங்கி வைக்க நன்மைகள் நடைபெறும்.
ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பிறந்தவர் கண்ணன். கண்ணனின் வருகைக்காக அவரது பக்தர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கண்ணன் பிறந்த நாளில் பகவான் கிருஷ்ணருக்கு பிரியமான பொருட்களை நம்முடைய வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

கண்ணனுக்கு பிடித்தமானது மயிலிறகு. கண்ணனின் தலையில் எப்போதும் மயிலிறகு குடியேறியிருக்கும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமானோர் மயிலிறகு வாங்கிக்கொண்டு செல்கின்றனர். நம்முடைய வீட்டில் கண்ணனுக்குப் பிடித்தமான மயிலிறகை வாங்கி வீட்டில் வைக்கலாம்.
நம்முடைய வீட்டில் பணம் அதிகம் செலவானால் அதனை கட்டுப்படுத்த ஒரே பரிகாரம் மயிலிறகுதான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்த மயிலிறகை நாம் பணம், நகை வைக்கும் அலமாரியில், பிரோவில் வைக்க வேண்டும். இதன் மூலம் வருமானம் கூடும் செல்வம் பெருகும். பணம் வீட்டில் நிலைக்கவும் செய்யும்.
படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் மயிலிறகுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் மயில் இறகுகளை வைக்கலாம். குழந்தைகள் படிக்கும் ஸ்டடி ரூமில் மயிலிறகை வைத்து தினமும் வணங்கிவிட்டு படிக்கத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மயிலிறகை படுக்கை அறையில் நாம் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நெருக்கமும் கூடும். தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும்.
ஆயர்பாடியில் கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக்கொண்டு புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அனைவரையும் மயக்கிக்கொண்டிருப்பார். அவரது குழல் ஓசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நாம் பசுக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். கோமாதா சிலைகளை நாம் வீட்டிற்குள் வாங்கி வைக்கலாம். கூடவே கண்ணனுக்கு பிரியமான புல்லாங்குழலை வாங்கி வைக்கலாம். பணம் வைக்கும் பீரோவில் புல்லாங்குழல் வைப்பதன் மூலம் நம்முடைய வீட்டில் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடி நீங்கும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications