Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழலூதும் கண்ணன்.. மயிலறகு சூடிய மன்னன்.. உங்கள் வீட்டில் இதை வைத்திருந்தால் கிருஷ்ணன் ஓடி வருவான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கண்ணனுக்கு பிடித்தமான பொருட்களை வீட்டிற்குள் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டமும் செல்வ செழிப்பும் உண்டாகும். கண்ணனின் கைகளில் எப்போதும் புல்லாங்குழல் இருக்கும்.. தலையில் மயிலிறகு சூடியிருப்பார். கிருஷ்ணன் சங்கு சக்கரம் ஏந்தியிருப்பார். கண்ணனின் பிறந்தநாளில் கண்ணனுக்குப் பிடித்தமான பொருட்களை நம்முடைய வீட்டில் நாம் வாங்கி வைக்க நன்மைகள் நடைபெறும்.

ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பிறந்தவர் கண்ணன். கண்ணனின் வருகைக்காக அவரது பக்தர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கண்ணன் பிறந்த நாளில் பகவான் கிருஷ்ணருக்கு பிரியமான பொருட்களை நம்முடைய வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

Krishna Jayanthi Vastu tips: Why Kannan like Flute and Peacock feather

கண்ணனுக்கு பிடித்தமானது மயிலிறகு. கண்ணனின் தலையில் எப்போதும் மயிலிறகு குடியேறியிருக்கும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமானோர் மயிலிறகு வாங்கிக்கொண்டு செல்கின்றனர். நம்முடைய வீட்டில் கண்ணனுக்குப் பிடித்தமான மயிலிறகை வாங்கி வீட்டில் வைக்கலாம்.

நம்முடைய வீட்டில் பணம் அதிகம் செலவானால் அதனை கட்டுப்படுத்த ஒரே பரிகாரம் மயிலிறகுதான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்த மயிலிறகை நாம் பணம், நகை வைக்கும் அலமாரியில், பிரோவில் வைக்க வேண்டும். இதன் மூலம் வருமானம் கூடும் செல்வம் பெருகும். பணம் வீட்டில் நிலைக்கவும் செய்யும்.

படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் மயிலிறகுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் மயில் இறகுகளை வைக்கலாம். குழந்தைகள் படிக்கும் ஸ்டடி ரூமில் மயிலிறகை வைத்து தினமும் வணங்கிவிட்டு படிக்கத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மயிலிறகை படுக்கை அறையில் நாம் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நெருக்கமும் கூடும். தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும்.

ஆயர்பாடியில் கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக்கொண்டு புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அனைவரையும் மயக்கிக்கொண்டிருப்பார். அவரது குழல் ஓசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நாம் பசுக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். கோமாதா சிலைகளை நாம் வீட்டிற்குள் வாங்கி வைக்கலாம். கூடவே கண்ணனுக்கு பிரியமான புல்லாங்குழலை வாங்கி வைக்கலாம். பணம் வைக்கும் பீரோவில் புல்லாங்குழல் வைப்பதன் மூலம் நம்முடைய வீட்டில் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடி நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+