குழலூதும் கண்ணன்.. மயிலறகு சூடிய மன்னன்.. உங்கள் வீட்டில் இதை வைத்திருந்தால் கிருஷ்ணன் ஓடி வருவான்!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கண்ணனுக்கு பிடித்தமான பொருட்களை வீட்டிற்குள் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டமும் செல்வ செழிப்பும் உண்டாகும். கண்ணனின் கைகளில் எப்போதும் புல்லாங்குழல் இருக்கும்.. தலையில் மயிலிறகு சூடியிருப்பார். கிருஷ்ணன் சங்கு சக்கரம் ஏந்தியிருப்பார். கண்ணனின் பிறந்தநாளில் கண்ணனுக்குப் பிடித்தமான பொருட்களை நம்முடைய வீட்டில் நாம் வாங்கி வைக்க நன்மைகள் நடைபெறும்.
ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பிறந்தவர் கண்ணன். கண்ணனின் வருகைக்காக அவரது பக்தர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கண்ணன் பிறந்த நாளில் பகவான் கிருஷ்ணருக்கு பிரியமான பொருட்களை நம்முடைய வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

கண்ணனுக்கு பிடித்தமானது மயிலிறகு. கண்ணனின் தலையில் எப்போதும் மயிலிறகு குடியேறியிருக்கும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமானோர் மயிலிறகு வாங்கிக்கொண்டு செல்கின்றனர். நம்முடைய வீட்டில் கண்ணனுக்குப் பிடித்தமான மயிலிறகை வாங்கி வீட்டில் வைக்கலாம்.
நம்முடைய வீட்டில் பணம் அதிகம் செலவானால் அதனை கட்டுப்படுத்த ஒரே பரிகாரம் மயிலிறகுதான். கிருஷ்ண ஜெயந்தி நாளில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்த மயிலிறகை நாம் பணம், நகை வைக்கும் அலமாரியில், பிரோவில் வைக்க வேண்டும். இதன் மூலம் வருமானம் கூடும் செல்வம் பெருகும். பணம் வீட்டில் நிலைக்கவும் செய்யும்.
படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் மயிலிறகுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் மயில் இறகுகளை வைக்கலாம். குழந்தைகள் படிக்கும் ஸ்டடி ரூமில் மயிலிறகை வைத்து தினமும் வணங்கிவிட்டு படிக்கத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மயிலிறகை படுக்கை அறையில் நாம் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நெருக்கமும் கூடும். தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும்.
ஆயர்பாடியில் கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக்கொண்டு புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அனைவரையும் மயக்கிக்கொண்டிருப்பார். அவரது குழல் ஓசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நாம் பசுக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். கோமாதா சிலைகளை நாம் வீட்டிற்குள் வாங்கி வைக்கலாம். கூடவே கண்ணனுக்கு பிரியமான புல்லாங்குழலை வாங்கி வைக்கலாம். பணம் வைக்கும் பீரோவில் புல்லாங்குழல் வைப்பதன் மூலம் நம்முடைய வீட்டில் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடி நீங்கும்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications