துள்ளி ஓடும் முயல்.. கையில் பிடிப்பது போல கனவு வருதா? அப்போ ஜாக்பாட் வீடு தேடி வருமாம்
சென்னை: நம்முடைய கனவில் மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள், விலங்குகள், பாம்புகள் அடிக்கடி வந்து போகும். அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருக்கும். எனக்கு முயலை பிடிப்பது போல கனவு வருதே அதற்கு என்ன காரணம் என்று ஒருவா என்னிடம் கேட்டார். யாருக்கெல்லாம் எந்த மாதிரியான முயல் கனவு வருதோ அதற்கேற்ப பலனை அறிந்து கொள்ளுங்கள்.
முயல் வேட்டை: ஆடி மாதம் என்றாலே பலரும் முயல் வேட்டைக்கு செல்வார்கள். குழியில் இருக்கும் முயல்கள் துள்ளி விளையாடுவது போல சிலரது கனவில் வரும். கனவில் முயலை பார்ப்பது மகிழ்ச்சியான விசயத்தை கொண்டு வரும். என்ன கலர் முயலை கனவில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும். முயல் குட்டி போடுவது போல கனவில் வந்தால் தொழிலில் நீங்கள் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். முயலை வேட்டையாடி அதன் இறைச்சியை சாப்பிடுவது போல கனவில் வந்தால் உங்களின் உறவுகளால் நன்மைகள் அதிகரிக்கும்.

வெள்ளை முயல்: முயல் பேசுவது போல கனவில் வந்தால் உங்களுக்கு ஏதோ மகிழ்ச்சியான நல்ல செய்தி தேடி வரப்போகிறது.
உங்கள் கனவில் ஒரு வெள்ளை முயலைப் பார்ப்பது நீங்கள் பிறரிடம் காட்டும் உண்மையான அன்பை குறிக்கிறது. மேலும் வெள்ளை முயல் உங்களை சரியான திசையை நோக்கி நகர்த்துவதற்கான வழிகாட்டியாகவும் செயல்படுகிறது.
பழுப்பு நிற முயல்: உங்கள் கனவில் பழுப்பு நிற முயலை காண நேர்ந்தால் பொருளாதார இலக்கை அடைவீர்கள். நீங்கள் சரியான பாதையில் செய்ய இருப்பதை உணர்த்துகிறது. ஒருவேளை நீங்கள் சொத்து வாங்க முதலீடு கூட செய்யலாம். உங்கள் கனவில் ஒரு கருப்பு முயலைப் பார்ப்பது நெருக்கடிகளை குறித்து பயப்படுவதை குறிக்கும். நெருக்கடியை நினைத்து பயப்பட வேண்டாம். உங்கள் கனவில் நீல நிற முயலை பார்ப்பது உங்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி தேடி வந்து சேரும் என்பது நம்பிக்கை.
இறந்த முயல்: உங்கள் கனவில் இறந்த முயலை பார்ப்பது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை முன்னறிவிக்கிறது. ஒரு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு முயல் உங்கள் கனவில் வந்தால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெறி கொண்டு முயல் உங்களை கடிப்பது போல கனவில் வந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மகிழ்ச்சியான செய்தி: மிகப் பெரிய அல்லது இராட்சத முயல் உங்களுடைய கனவில் திடீரென வந்தால் வரவிருக்கும் அதிர்ஷ்டம் மிகப்பெரியதாக இருக்கப்போகிறது என்று அர்த்தம். நிறைய முயல்கள் குட்டி முயல்களை கனவில் கண்டால் உங்களுடைய குழந்தைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரப்போகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. முயல் காயமடைவது போல கனவு வந்தால் உங்களுக்கு மிக நெருக்கமானவர் ஏதாவது ஆபத்தில் சிக்கப்போகிறார் என்று அர்த்தம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications